Skip to main content

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது...

"இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள்.

நெதன்யாகு
நெதன்யாகு

உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்.

மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதிலிருந்து வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறேன்.

கடந்த காலக் கண்காணிப்பின் போது, புரோஸ்டேட் பகுதியில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான மிகச்சிறிய புள்ளி கண்டறியப்பட்டது.

பரிசோதனை செய்ததில், அது ஒரு வீரியம் மிக்கக் கட்டியின் (Malignant tumor) ஆரம்ப நிலை என்பதும், அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எங்கும் பரவவில்லை என்பதும் தெரியவந்தது.

எனது வயதினரிடையே இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்றும், இதற்கு இரண்டு தீர்வுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள்...

1. இதற்குச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. கண்காணிப்பில் மட்டும் இருந்தால் போதும். இதனோடு வாழ முடியும், பலர் அவ்வாறே செய்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

2. சிகிச்சை மேற்கொண்டு அந்தப் பிரச்னையை வேரோடு அகற்றுவது.

உங்களுக்கு என்னை பற்றி ஏற்கனவே தெரியும்.

ஏதேனும் சாத்தியமான ஆபத்து குறித்து சரியான நேரத்தில் எனக்குத் தகவல் கிடைத்தால், அதை உடனடியாகச் சரிசெய்யவே நான் விரும்புவேன். இது தேச அளவிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி. அதையே தான் நான் செய்தேன்.

நான் சிகிச்சையை மேற்கொண்டேன். அது அந்தப் பிரச்னையை சிறு தடம் கூட இல்லாமல் நீக்கிவிட்டது.

நான் சில குறுகிய கால சிகிச்சைகளுக்குச் சென்றேன். அந்த நேரத்தில் புத்தகங்கள் வாசித்தேன். எனது பணிகளையும் தொடர்ந்து கவனித்தேன். அந்தப் புள்ளி இப்போது முழுமையாக மறைந்துவிட்டது.

இறைவனுக்கு நன்றி, இதையும் நான் கடந்து வந்துவிட்டேன்.

ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், அற்புதமான மருத்துவக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது - உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முறையாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்.

இந்தச் சப்பாத் தினத்தின் மாலை வேளையில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயமடைந்த எங்களது வீரர்களின் அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவரின் சார்பாகவும் அவர்களுக்கு எனது அன்பையும், அவர்கள் முழுமையாகக் குணமடைய எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷப்பாத் ஷலோம்."


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...