Skip to main content

Doctor Vikatan: அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ  அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவையா? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

உடலில் அடிபடும் போது, அந்தப் பகுதியில் உள்ள சருமம், அதற்குக் கீழுள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு போன்ற உடற்கூறியல் அமைப்புகள் (Anatomical structures) பாதிக்கப்படுகின்றன. அடிபட்டவுடன் இந்த அமைப்புகள் சிதைவடையக்கூடும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கும்.

சருமத்துக்கு அடியில் கசியும் ரத்தம், மற்ற இடங்களுக்குப் பரவ முடியாமல் ஓரிடத்தில் தேங்கும்போது வீக்கம் உண்டாகிறது. ரத்தம் மட்டுமன்றி, செல்களுக்கு இடையே உள்ள நீர் (Intercellular fluid), சிதைந்த செல் சுவர்கள் வழியாக வெளியேறி செல்களுக்குள் (Intracellular fluid) சேர்வதாலும் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் என்பது அடிபட்ட காயம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டும் ஓர் அறிகுறியாகும். இதனை ஆங்கிலத்தில் 'இன்ஃப்ளமேஷன்' (Inflammation) என்று சொல்கிறோம். அடிபட்ட இடத்தில் வலி, அந்த இடம் சிவப்பு நிறமாக மாறுதல் மற்றும் ரத்தக்கட்டு ஆகியவையும் இதன் கூறுகளே.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகள் பெரும்பாலும் 'Anti-inflammatory' மருந்துகளாகவே செயல்படுகின்றன. இவை செல்கள் மற்றும் ரத்தக் குழாய்களுக்கு இடையே தேங்கியுள்ள நீர் மற்றும் ரத்தக்கட்டைச் சரி செய்ய உதவுகின்றன. உடைந்த சாலையைச் சீரமைப்பது போல, ரத்தம் வழியாகக் கழிவுகள் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்களை உடல் தானாகவே சரி செய்யத் தொடங்கும்.

முட்டிகளுக்குக் கீழே ரத்தம் கட்டியிருந்தால், நீர் மேலே ஏற முடியாமல், பாதம் பெரிதாக வீங்கத் தொடங்கும். எனவே, கால்களை உயர்த்திவைத்து, அந்த நீர்  உடலுக்குள்   இறங்குவதற்கு வழி செய்ய வேண்டும்.   மாத்திரையானது வீக்கத்தைக் குறைத்து, அங்குள்ள கெட்டுப்போன தசைகள், சிதைந்துபோன தசைகள், கெமிக்கல் போன்றவற்றை நீராக மாற்றும். அது  ரத்தக் குழாய்கள் மூலம் உடலுக்குள் வரும். அது சுத்திகரிக்கப்பட்டு கல்லீரல், சிறுநீரகங்கள், உணவுக்குழாய் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப்படும்.

வீக்கம் வந்தால்  'RICE' முதலுதவி முறையைப் பின்பற்ற வேண்டும்.

R - Raise (உயர்த்துதல்): அடிபட்ட இடத்தை இதயத்தின் மட்டத்திற்கு மேலே உயர்த்தி வைக்க வேண்டும். உதாரணமாக, காலில் அடிபட்டால் காலை உயர்த்தி வைப்பதன் மூலம் தேங்கியுள்ள நீர் மற்றும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்ல உதவும்.

I - Ice (ஐஸ் கட்டிகள்): அடிபட்ட முதல் ஐந்து நாள்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.

C - Compression (அழுத்தம்): பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப் போடுவதன் மூலம் வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

E - Elevation (உயரம்): அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.

மேற்குறிப்பிட்ட முதலுதவிகளுடன், மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்வது ரத்தக்கட்டு விரைவில் கரையவும், சீழ்ப் பிடிக்காமல் இருக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக இந்த எல்லா விஷயங்களும்  குணமடையும் செயல்முறைக்கு பொதுவாக 7 முதல் 14 நாள்கள் வரை ஆகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...