Skip to main content

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும்.

குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்கள் (Foveal burns), கண்ணுக்குள் ரத்தக்கசிவு, கண்ணின் மையப்பகுதியான மேகுலாவில் ஓட்டை விழுதல் (Macular hole), மேகுலாவில் தழும்பு ஏற்படுதல் (Macular scar) போன்ற பிரச்னைகள் பாதிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ணுக்கு முன்னால் திடீரென ஒளி மின்னுவது போன்ற உணர்வை (Dazzling effect)  எதிர்கொள்வார்கள். சிலருக்கு இந்தப் பாதிப்பு தற்காலிகமாக இருந்துவிட்டு, சரியாகிவிடும், ஆனால், சிலருக்கு இதனால் கண்களில் நிரந்தர சேதம் ஏற்படலாம். 

விழித்திரை (Retina) பாதிக்கப்படலாம். அதன் விளைவாக கண்களில் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு (Floaters) தெரிவது அல்லது மையப்பார்வை முழுமையாக மறைவது போன்ற சிக்கல்களைச் சந்திப்பார்கள்.

இந்த அறிகுறிகளை உணர்ந்தால், பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனேயே கண் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் முதல்கட்டமாக அடிப்படை சோதனைகளைச் செய்வார். தவிர, 
பார்வையின் அளவைக் கண்டறிய 'விஷுவல் ஃபீல்ட்ஸ் டெஸ்ட்' (Visual Fields Test),  ரத்த நாளங்களின் நிலையை அறிய, 'ஃபண்டஸ் ஃப்ளோரசீன் ஆஞ்சியோகிராபி'  (Fundus Fluorescein Angiography),  பாதிப்பின் தீவிரத்தைத் துல்லியமாகக் கணிப்பற்கு 'ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி'  (Optical Coherence Tomography) போன்றவற்றையும் பரிந்துரைப்பார். 

வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால் அவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில்,  லூப்ரிகன்ட் சொட்டு மருந்துகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதுவே,  ரத்தக்கசிவு இருந்தால், விட்ரெக்டமி (Vitrectomy) அறுவை சிகிச்சை மூலம் ரத்தம் அகற்றப்படும். மேகுலாவில் ஓட்டை இருந்தால், அந்தத் துளையை அடைக்க  விட்ரெக்டமி அறுவை சிகிச்சையுடன் காஸ் இன்ஜெக்ஷனும் (Gas injection) கொடுக்கப்படும். 

தற்போது குழந்தைகள்  லேசர் பாயின்டர்கள் (Laser pointers) வைத்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. அவை கண்களை நிச்சயம் பாதிக்கும். அதேபோல் வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால்  அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், தேவையற்ற பிரகாசமான ஒளிக்கதிர்களைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...