Skip to main content

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும்.

குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்கள் (Foveal burns), கண்ணுக்குள் ரத்தக்கசிவு, கண்ணின் மையப்பகுதியான மேகுலாவில் ஓட்டை விழுதல் (Macular hole), மேகுலாவில் தழும்பு ஏற்படுதல் (Macular scar) போன்ற பிரச்னைகள் பாதிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ணுக்கு முன்னால் திடீரென ஒளி மின்னுவது போன்ற உணர்வை (Dazzling effect)  எதிர்கொள்வார்கள். சிலருக்கு இந்தப் பாதிப்பு தற்காலிகமாக இருந்துவிட்டு, சரியாகிவிடும், ஆனால், சிலருக்கு இதனால் கண்களில் நிரந்தர சேதம் ஏற்படலாம். 

விழித்திரை (Retina) பாதிக்கப்படலாம். அதன் விளைவாக கண்களில் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு (Floaters) தெரிவது அல்லது மையப்பார்வை முழுமையாக மறைவது போன்ற சிக்கல்களைச் சந்திப்பார்கள்.

இந்த அறிகுறிகளை உணர்ந்தால், பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனேயே கண் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் முதல்கட்டமாக அடிப்படை சோதனைகளைச் செய்வார். தவிர, 
பார்வையின் அளவைக் கண்டறிய 'விஷுவல் ஃபீல்ட்ஸ் டெஸ்ட்' (Visual Fields Test),  ரத்த நாளங்களின் நிலையை அறிய, 'ஃபண்டஸ் ஃப்ளோரசீன் ஆஞ்சியோகிராபி'  (Fundus Fluorescein Angiography),  பாதிப்பின் தீவிரத்தைத் துல்லியமாகக் கணிப்பற்கு 'ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி'  (Optical Coherence Tomography) போன்றவற்றையும் பரிந்துரைப்பார். 

வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால் அவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில்,  லூப்ரிகன்ட் சொட்டு மருந்துகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதுவே,  ரத்தக்கசிவு இருந்தால், விட்ரெக்டமி (Vitrectomy) அறுவை சிகிச்சை மூலம் ரத்தம் அகற்றப்படும். மேகுலாவில் ஓட்டை இருந்தால், அந்தத் துளையை அடைக்க  விட்ரெக்டமி அறுவை சிகிச்சையுடன் காஸ் இன்ஜெக்ஷனும் (Gas injection) கொடுக்கப்படும். 

தற்போது குழந்தைகள்  லேசர் பாயின்டர்கள் (Laser pointers) வைத்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. அவை கண்களை நிச்சயம் பாதிக்கும். அதேபோல் வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால்  அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், தேவையற்ற பிரகாசமான ஒளிக்கதிர்களைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...