Skip to main content

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்.

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது. 

மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரும் நிலைகளில் கவனம் தேவை.

அதாவது, தூக்கத்தில் பேசுவது என்பது அடிக்கடி நிகழும்போது, தூக்கத்தில் அதிக சத்தத்துடன் கத்துவது அல்லது பயப்படுவது (Night Terrors), தூக்கத்தில் பேசுவதோடு, தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் (Sleep Walking) சேர்ந்து இருப்பது, பகல் நேரத்தில் அதிக சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கத்துடனோ இருப்பது, அதிக மன அழுத்தம் அல்லது பதற்றம் இருக்கும்போது... மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.  ஆரம்ப நிலையில், அடிப்படையான சில விஷயங்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். 

சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். முறையான தூக்கம் தடைப்படும்போது இந்தப் பிரச்னை வரலாம். காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படும்போதும் வரலாம். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. ஆனாலும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்குச் சிகிச்சை தேவைப்படலாம். 

சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

அதாவது, தூக்கத்தில் பேசுவது உங்கள் தூக்கத்தைப் பாதித்தாலோ, மறுநாள் காலை எழுந்ததும் களைப்பாக உணர்கிறீர்கள் என்றாலோ மருத்துவ ஆலோசனை அவசியம். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள் என்றால், காலை ஷிஃப்ட்டில் வேலை பார்க்க முடியுமா என யோசிக்கலாம். ஸ்ட்ரெஸ் இருந்தால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். 

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் போன் அல்லது டிவி பார்ப்பதைத் தவிர்க்கவும். தூங்குவதற்கு முன் இரண்டு நிமிடங்கள் எளிய மூச்சுப்பயிற்சி அல்லது ரிலாக்சேஷன் பயிற்சிகளைச் செய்யலாம்.

தூங்குவதற்கு முன் வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்கவும். இந்த எளிய விஷயங்களைப் பின்பற்றியும் பிரச்னை சரியாகவில்லை என்றால்,  மருத்துவரை அணுகுவது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...