Skip to main content

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து.

அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா...

ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ?

சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம்.

சித்த மருத்துவர் சங்கீதா
சித்த மருத்துவர் சங்கீதா

காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை மிகுதியாக உட்கொண்டால் சிறுநீரகம் செயல்பாட்டில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மருந்துகள் உடலில் இருந்து வெளியேறுவதும் சிறுநீரக செயல்பாட்டுடன் தொடர்புடையதே.

மேலும் மூளை மற்றும் இதய இரத்தகுழாய்களில் அடைப்புகளை உண்டாக்கி அவற்றையும் பாதிக்கக்கூடும்.

எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?

சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது:

கோழிக்கறி

கடல் நண்டு

செம்மறி ஆட்டிறைச்சி

மாட்டிறைச்சி

ஊர்ப்பன்றி

சிலவகை மீன் வகைகள் (இறால், கருவாவல், உழுவை, வாளை, கெளுத்தி மீன், நெய் தோலி)

இவை உடலில் வெப்பம், அழற்சி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் என்பதால், பத்திய காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இறைச்சி
இறைச்சி

'இந்த' இறைச்சிகளைச் சாப்பிடலாம்!

பத்திய காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஒவ்வாமை ஏற்படுத்தாத இறைச்சி வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அவை...

வெள்ளாட்டுக்கறி (மெலிந்த பகுதி)

கருங்கோழி

காணாங்கோழி

காடை

கௌதாரி

சிறிய வகை மீன்கள் (நெத்திலி, சுதும்பு, வெள்ளைவாவல், பேராரால், சன்னக்கூனி, விரால், அயிரை மீன்)

இவற்றை கறியாக அல்லாமல் சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

எந்த நோய்களுக்கு இறைச்சி தவிர்க்க வேண்டும்?

எல்லா நோய்களுக்கும் இறைச்சி முற்றிலும் தடை இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்தே பத்தியம் மாறும்.

சரும நோய்கள் (Skin diseases), பெரும்பாலான சுரங்கள், அழற்சி அதிகம் உள்ள நோய்கள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் (gout) இறைச்சி சாப்பிட்டால் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...