Skip to main content

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து.

அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா...

ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ?

சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம்.

சித்த மருத்துவர் சங்கீதா
சித்த மருத்துவர் சங்கீதா

காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை மிகுதியாக உட்கொண்டால் சிறுநீரகம் செயல்பாட்டில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மருந்துகள் உடலில் இருந்து வெளியேறுவதும் சிறுநீரக செயல்பாட்டுடன் தொடர்புடையதே.

மேலும் மூளை மற்றும் இதய இரத்தகுழாய்களில் அடைப்புகளை உண்டாக்கி அவற்றையும் பாதிக்கக்கூடும்.

எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?

சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது:

கோழிக்கறி

கடல் நண்டு

செம்மறி ஆட்டிறைச்சி

மாட்டிறைச்சி

ஊர்ப்பன்றி

சிலவகை மீன் வகைகள் (இறால், கருவாவல், உழுவை, வாளை, கெளுத்தி மீன், நெய் தோலி)

இவை உடலில் வெப்பம், அழற்சி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் என்பதால், பத்திய காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இறைச்சி
இறைச்சி

'இந்த' இறைச்சிகளைச் சாப்பிடலாம்!

பத்திய காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஒவ்வாமை ஏற்படுத்தாத இறைச்சி வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அவை...

வெள்ளாட்டுக்கறி (மெலிந்த பகுதி)

கருங்கோழி

காணாங்கோழி

காடை

கௌதாரி

சிறிய வகை மீன்கள் (நெத்திலி, சுதும்பு, வெள்ளைவாவல், பேராரால், சன்னக்கூனி, விரால், அயிரை மீன்)

இவற்றை கறியாக அல்லாமல் சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

எந்த நோய்களுக்கு இறைச்சி தவிர்க்க வேண்டும்?

எல்லா நோய்களுக்கும் இறைச்சி முற்றிலும் தடை இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்தே பத்தியம் மாறும்.

சரும நோய்கள் (Skin diseases), பெரும்பாலான சுரங்கள், அழற்சி அதிகம் உள்ள நோய்கள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் (gout) இறைச்சி சாப்பிட்டால் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...