Skip to main content

பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn

"சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்!

எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர்.

மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்!

உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு கருத்தரங்கம், வருகிற மார்ச், 29 (ஞாயிறு) அன்று சென்னை அம்பத்தூரில் நடைபெற இருக்கிறது.

இந்தக் கருத்தரங்கம் வெறும் அறிவுரை வழங்கும் மேடை மட்டுமல்ல; இது உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு நேரடி வழிகாட்டியாகும்.

5 நிபுணர்கள் - 5 தலைப்புகள்!

நீழிரிவு நோயால் வரும் பாதப் பிரச்னைகள் மற்றும் அதன் நலன்கள் குறித்து ஐந்து வெவ்வேறு கோணங்களில் ஐந்து மருத்துவ நிபுணர்கள் உங்களுடன் உரையாட உள்ளனர்.

நேரடி கேள்வி-பதில்!

டயபெட்டிக் பாதப் பிரச்னைகள் குறித்து உங்கள் மனதில் உள்ள அத்தனை சந்தேகங்களையும் நீங்கள் மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

சிறப்பு விருந்தினர்!

அனைவராலும் விரும்பப்படும் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு, ஆரோக்கியம் குறித்து தனது பாணியில் சிறப்பாக உரையாற்றவும் இருக்கிறார்.

கருத்தரங்க நாள்: மார்ச் 29, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

இடம்: ஸ்ரீ சர்வா மஹால், அம்பத்தூர், சென்னை.

முகவரி: எண்: 57/51, ரெட்ஹில்ஸ் சாலை, புதூர் (புதூர் பேருந்து நிறுத்தம் அருகில்).

அனுமதி முற்றிலும் இலவசம்! ஆனால் குறைவான இடங்களே உள்ளதால் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn

மேலும், விவரங்களுக்கு:


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...