Skip to main content

Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய்  இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1  என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை.  வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என்  தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு?

-Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination).

நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை.  உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது  உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும்  நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை.

 உடல் சோர்வாக இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன.

உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை.

தற்போது  நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற  நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.  உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே  சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...