Skip to main content

வேலைப்பளுவும் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமானதால் கேன்சர்... உண்மைச் சம்பவமும் மருத்துவ எச்சரிக்கையும்!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின்பற்றும் வழக்கம் கொண்டவராம் அந்தப் பெண். இத்தனையையும் தாண்டி, அவருக்கு கேன்சர் பாதிக்கக் காரணம் என்ன தெரியுமா?

அதிகப்படியான பணிச்சுமை
அதிகப்படியான பணிச்சுமை

அலுவலகத்தில் நிலவும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் டார்கெட்டை அடைய வேண்டிய அழுத்தம்... இவற்றால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமே கேன்சருக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்வது, இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, தாமதமாகவும் மிகக் குறைவாகவும் தூங்குவது போன்றவையும் காரணங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய அந்தப் பெண், மன ஆரோக்கியத்தை (Mental Health) கவனிக்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வெறும் உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து காக்காது.

மன அழுத்தம் (Stress) என்பது உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சிதைத்து, புற்றுநோய் செல்கள் வளர வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுவலக வேலைக்கும் பர்சனல் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (Work-life balance) பேணுவது மிக அவசியம்.

ஆரோக்கியமான உடல் என்பது அமைதியான மனதில்தான் தொடங்குகிறது என்ற அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும் நிலையில், அதீத வேலைச்சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம் எல்லாம் புற்றுநோய்க்குக் காரணமாகுமா....?

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.

''ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தாலும், அவை ஒருவருக்கு முழுமையான நோய் எதிர்ப்பாற்றலை (Immunity) உறுதி செய்வதில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம்...'' என்று எச்சரித்து ஆரம்பிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார். மன அழுத்தத்துக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்தும் விளக்குகிறார் அவர்.

''நீண்ட கால மன அழுத்தம், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், இது உடலில் தேவையற்ற அழற்சியை (Inflammation) உண்டாக்கி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

நம் உடலில் உருவாகும் அசாதாரணமான அல்லது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. ஆனால், மன அழுத்தத்தால் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், இந்தச் செல்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் தடையின்றி பெருகத் தொடங்குகின்றன.

தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் (Metastasis) மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது.

தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது.

எந்தப் புற்றுநோயையும் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான நபர்கள் 45 வயதிலிருந்தும், குடும்பப் பின்னணியில் புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், 20 அல்லது 30 வயதிலிருந்தும்  பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.

உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அக்கறையை, மனநலனுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமுறை, வொர்க்-லைஃப் பேலன்ஸைப் பழகுவது போன்றவற்றை இனியாவது சீரியஸாகப் பின்பற்றுங்கள்....'' 

-மீண்டும் எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...