Skip to main content

Doctor Vikatan: எப்போதும் காதுகளில் அரிப்பு; பட்ஸ் உபயோகித்தால் மட்டுமே தீர்வு: என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு எப்போதும் காதுகளில் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி அரிக்கும்போது, பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் அரிப்பு நிற்கிறது. இது தினசரி வாடிக்கையாகவே இருக்கிறது. காதுகளில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்... இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை  சிகிச்சை மருத்துவர் தீபிகா. 

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது குடைவது என்பது பலருக்கும் ஒரு பழக்கம் போல மாறிவிடுகிறது. ஆனால், இது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய சிக்கலாக மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

காது அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு அவற்றில் எது காரணமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில்,  காதில் சுரக்கும் மெழுகு (Ear wax) ஒருவித பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும். அதை நாம் அடிக்கடி சுத்தம் செய்வதால், காதுகளின் உட்பகுதி வறண்டு அரிப்பு உண்டாகிறது. குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்வதால் அல்லது அதிக வியர்வை காரணமாக பூஞ்சைக் கிருமிகள் வளர்வதால் அரிப்பை ஏற்படலாம்.

ஜலதோஷம் அல்லது காது அடைப்பு காரணமாக நடுக்காதில் ஏற்படும் அழுத்த மாறுபாடும் அரிப்பைத் தூண்டும். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம்.

சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம்.

காரணம் என்னவாக இருந்தாலும், காதுகளைக் குடைவது அரிப்பைத் தீர்க்காது/ மாறாக,  பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். பட்ஸ் (Ear buds), சேஃப்டி பின் அல்லது குச்சிகளைப் பயன்படுத்தும்போது காதுகளின் மென்மையான சருமம் கிழிந்து ரத்தம் வரலாம். கைகளில் உள்ள கிருமிகள், காதுக்குள் சென்று 'ஓடிடிஸ் எக்ஸ்டர்னா' (Otitis Externa) போன்ற வெளிக்காது அழற்சியை உண்டாக்கலாம். காது குடையும்போது, தவறுதலாக, காதுத் திரையை (Ear drum) குத்தினால் நிரந்தரமாக  காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

அரிப்பு ஏற்படும்போது உடனடியாகக் குடையாமல் கீழ்க்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிய பஞ்சு உருண்டையை நனைத்து, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்துவிட்டு காதின் நுழைவாயிலில் மென்மையாக வைக்கலாம். இது வறட்சியை நீக்கி இதம் தரும். காது தானாகவே மெழுகை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காது குடைவதால் ஏற்படும் சிறிய காயம் கூட, Malignant Otitis Externa எனப்படும் மிகக் கடுமையான எலும்புத் தொற்றுக்கு வழிவகுக்கும். இது குணமடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் காது குடையக்கூடாது.

மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

அரிப்புடன் சேர்ந்து காதில் நீர் அல்லது சீழ் வடிந்தாலோ, காதில் வலி அல்லது வீக்கம் இருந்தாலோ, கேட்கும்  திறன் குறைவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...