Skip to main content

Doctor Vikatan: இதய நலனைத் தெரிந்துகொள்ள  பரிசோதனை மட்டும் போதுமா?!

Doctor Vikatan: வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்க்கிறோம். மற்ற டெஸ்ட்டுகளை பொறுத்தவரை பிரச்னையில்லை. இதய நலனைப் பொறுத்தவரை, இசிஜி மட்டும் செய்கிறார்கள். அது மட்டுமே போதுமா... ஆஞ்சியோகிராம் தேவைப்படுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள பல பரிசோதனைகள் உள்ளன. டிரெட்மில் டெஸ்ட், இசிஜி, எக்கோ... என  அவரவர் தேவைக்கேற்ப, மருத்துவர் பரிசோதனையைப் பரிந்துரைப்பார்.  மிகவும் எளிமையான டெஸ்ட் என்பதால் பலரும்  இசிஜி பரிசோதனையைச் செய்து பார்க்கிறார்கள். இதில் சில விஷயங்கள் தெரியும், சிலது தெரியாது. 

'வருடம் தவறாமல் நான் இசிஜி டெஸ்ட் செய்து பார்த்துவிடுகிறேன்... என் இதயம் நன்றாக இருக்கிறது' என சிலர் அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது சரியானதல்ல. அதே மாதிரிதான் எக்கோ டெஸ்ட்டும். அதைச் செய்கிறபோது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படியிருக்கிறது என்று தெரியும். ஆனால், ரத்தக் குழாய்கள் எப்படியிருக்கின்றன என்பது எக்கோ டெஸ்ட்டில் தெரியாது. மருத்துவர் சந்தேகப்பட்டால் டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்வார். எனவே, யாருக்கு, எந்த டெஸ்ட் என்பதை மருத்துவரிடம் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்யப்படும். ஹார்ட் அட்டாக்  ஏற்பட்டது  இசிஜியில்  உறுதிசெய்யப்பட்டால், உடனே ஆஞ்சியோகிராம் வழியே அடைப்பைத் திறக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மற்றும் டிரெட்மில் டெஸ்ட்டுகளில் அப்நார்மல் என வந்தாலும் உடனே ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். மாரடைப்புக்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரியும்போது, மருத்துவர் உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ய அறிவுறுத்துவார்.

ஆஞ்சியோகிராம்

ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் எல்லோருமே 40 ப்ளஸ்ஸில் ஆஞ்சியோகிராம் செய்துபார்க்கலாமா என சிலர் கேட்பதுண்டு. ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. துல்லியமான அறிகுறிகள் இருக்கும்போது இதைச் செய்தால் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். 30 சதவிகித அடைப்பு இருப்பது தெரிந்தால், வருடா வருடம் அந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் செய்து பார்க்க வேண்டியதில்லை.  30 சதவிகித அடைப்பு இருந்தால் அது மேலும் அதிகமாவதை எப்படித் தவிர்க்கலாம் என்றுதான் மருத்துவர் யோசிப்பார். ரத்தச் சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் வேகமான நடைப்பயிற்சி செய்கிற ஒரு நபருக்கு ஆஞ்சியோகிராம் அவசியமில்லை. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...