Skip to main content

Doctor Vikatan: இதயநோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவர் இதயநோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர். இதயநோய் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவற்றைத் தாண்டி, கூடுதலாக சத்து மாத்திரைகள் (சப்ளிமென்ட்டுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா... எப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பொதுவாக, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் முறையான வாழ்க்கைமுறையும் இருப்பவர்களுக்கு கூடுதல் சப்ளிமென்ட்டுகள் (Supplements) அவசியமில்லை. இருப்பினும், சிலருக்கு, சில மருத்துவ நிலைகளில்  சப்ளிமென்ட்டுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம்.

அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) அதிகம் உள்ளது. குறிப்பாக, சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மீன் சாப்பிட முடியாத சைவ உணவுக்காரர்கள், அதற்கு பதிலாக வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு (Triglyceride) அளவைக் குறைத்து இதயத்திற்கு நன்மை செய்கிறது.

சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்களுக்கு உடலில் கோஎன்சைம் Q10 (CoQ10)  அளவு குறையலாம். இதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட,  பசலைக்கீரை, புரொக்கோலி, காலிஃபிளவர், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நிலக்கடலை, எள், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  இதயத்துடிப்பு சீராக இருக்கவும், தசைவலியைத் தவிர்க்கவும்  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்  அவசியம். இந்தச் சத்துகள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், அவகாடோ, மாதுளை, சப்போட்டா, கொய்யா மற்றும்பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றில் மிக அதிகம்.

இதயம், நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு  வைட்டமின் டி (Vitamin D)  மிக முக்கியம். இது சூரிய ஒளியிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கும் என்பதால், காலை 6 மணி முதல் 8 மணி வரை வெயிலில் சிறிது நேரம் இருப்பது சிறந்தது. மேலும், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவற்றிலும் இது ஓரளவு உள்ளது. பிளான்ட் ஸ்டீரால் மற்றும் நார்ச்சத்து  இரண்டும்,  எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக்  குறைத்து, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை  அதிகரிக்க உதவுகின்றன. இவை, ஓட்ஸ், கோதுமை, கைக்குத்தல் அரிசி, ஆப்பிள், அவகாடோ மற்றும் பட்டாணியில் இருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

வைட்டமின் டி
இதயம், நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி (Vitamin D) மிக முக்கியம். இது சூரிய ஒளியிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கும்.

ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்கள் சப்ளிமென்ட்டுகளைத் தவிர்த்து உணவுமூலம் சத்துகளைப் பெறுவதே நல்லது. கூடுதல் சப்ளிமென்ட் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். இவை தவிர, வாழ்க்கைமுறை மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும்.  தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உணவில்  உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரையைக்  குறைக்க வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எனவே, எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள்  அவசியமில்லை.  சத்தான உணவுகளின் மூலம் இந்தச் சத்துகளை இயற்கையாகவே பெற முடியும். மற்றபடி,  குறிப்பிட்ட நோயாளிகள் மட்டும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...