Skip to main content

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் உள்ளதையும் பார்க்கிறோம்.

அதிலும் பலர் ஜெல் நெயில் பாலிஷை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், சாதாரணமான நெயில் பாலிஷ் விரைவில் உரிந்து வந்துவிடும். மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஜெல் நெயில் பாலிஷ், மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். இதனால்தான் பலருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் பிடித்தமானதாக உள்ளது.

இன்று அதிகமானோர் நெயில் ஆர்ட்டை விரும்பி செய்துகொள்வதால், அதை முற்றிலும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை இதில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.

நகங்களின் மீது பல அடுக்குகளாக இந்த அலங்காரங்கள் செய்யப்படும். பிறகு மின் விளக்கின் கீழ் காயவைத்து, அந்த டிசைனை திடமானதாக மாற்ற வேண்டும். இதற்காக புற ஊதாக்கதிர் விளக்குகளை பார்லர்களில் பயன்படுத்துவார்கள்.

அப்போதுதான் அந்த ஆர்ட்டானது நீண்ட நாள்களுக்கு நகங்களில் அப்படியே இருக்கும். இந்த முறை நகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்தால் புற்றுநோய் வரை வரும் ஆபத்து இருக்கிறது.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, அடிக்கடி நெயில் ஆர்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்துக்குப் பதிலாக, எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்துகிற பார்லர்களில் நக அலங்காரம் செய்துகொள்ளலாம். அலங்காரத்துக்கான பாலிஷ் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

நெயில் ஆர்ட்
நெயில் ஆர்ட்

தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளாமல் ஏதாவது பண்டிகைகள், சுப நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின்போது நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம். நெயில் ஆர்ட் செய்துகொள்வதைப் போலவே, அதை முறையாக அகற்றுவதும் முக்கியம்.

நகமானது சேதமடைவது, காகிதம் போல கிழிவது போன்ற சிக்கல்களும் இருக்கும். அதனால் நெயில் ஆர்ட் செய்துகொண்டவர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை, குறிப்பாக... புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம்.

பயோட்டின் ஊட்டச்சத்து கூந்தலுக்கு உதவாது. ஆனால், நகங்களுக்குப் பெரிய ஆதாரமாக அமையும்.
அதேபோல நெயில் ஆர்ட் செய்யும்போது நகக்கண்ணான கியூட்டிக்கிளைக் குத்தி, குடைந்து சேதப்படுத்திவிடக் கூடாது.

நகத்தின் பாதுகாப்புக்காகவே நகக்கண்கள் இருக்கின்றன. அதை வடிவமைக்கிறேன் என்று பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது. இந்த கியூட்டிக்கிளை சேதப்படுத்துவதால்தான் பூஞ்சைத்தொற்று உருவாகிறது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், கவனமாக நெயில் ஆர்ட் செய்துகொண்டால் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...