Skip to main content

Doctor Vikatan: குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் - முன்கூட்டியே தடுக்க முடியுமா?

Doctor Vikatan: எங்கள் குடும்பத்துப் பெண்களில் இருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. குடும்பப் பின்னணியில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அது பாதிக்கும் ரிஸ்க் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா... என் வயது 45. எனக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா...முன்கூட்டியே தெரிந்துகொண்டு தடுக்க முடியுமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

முதல் விஷயம், நீங்கள் குறிப்பிடும் அந்த உறவினர், உங்களுக்கு ரத்த உறவா, எவ்வளவு நெருங்கியவர் என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அம்மா, பாட்டி, உங்கள் உடன் பிறந்த சகோதரி... இப்படி யாருக்கு புற்றுநோய் பாதித்தது என்பதைப் பாருங்கள்.

அடுத்து, புற்றுநோய் பாதித்த உங்கள் உறவினரின் வயதைப் பாருங்கள். வயதான பிறகு பாதித்ததா அல்லது 50 வயதுக்கு முன்பே பாதித்ததா என்று பாருங்கள். மார்பகப் புற்றுநோய் என்பதால், அது ஒரு மார்பகத்தை மட்டும் பாதித்ததா அல்லது இரண்டு மார்பகங்களையுமா என்றும் பாருங்கள். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான அதே நபருக்கு வேறு புற்றுநோய் பின்னணி ஏதேனும் இருந்ததா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, மார்பகப் புற்றுநோய் தவிர்த்து, சினைப்பைப் புற்றுநோய் இருந்ததா என்றும் பாருங்கள். 

குடும்பப் பின்னணியில் நெருங்கிய உறவுகளுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், அது குறித்த பயம் மற்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக மரண பீதி கொள்ளத் தேவையில்லை. யாருக்கேனும் இப்படிப் புற்றுநோய் வந்திருந்தால், ஜெனடிக் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பிஆர்சிஏ (BRCA) எனப்படும் டெஸ்ட் தேவைப்படலாம். ஜெனடிக் கவுன்சலிங் போகும்போதே, இந்த டெஸ்ட் உங்களுக்கு அவசியமா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இந்த டெஸ்ட்டின் அடிப்படையில், உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்க்கான ரிஸ்க் இருப்பதைத் தெரிந்துகொண்டு, முன்கூட்டியே அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளைச் செய்துகொள்ள முடியும். 

புற்றுநோய் ஆபத்து இருப்பது உறுதியானால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை (Prophylactic oophorectomy) செய்துகொள்ள முடியும்.

அதாவது, புற்றுநோய் ஆபத்து இருப்பது உறுதியானால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை (Prophylactic oophorectomy) செய்துகொள்ள முடியும். இதற்கடுத்து, மார்பகங்களை சுய பரிசோதனை செய்து பார்ப்பது எல்லாப் பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயம். கண்ணாடி முன் நின்றுகொண்டு, மாதம் ஒருமுறையோ, இருமுறையோ, உங்கள் மார்பகங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். இது குறித்த தகவல்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 

இதற்கடுத்து, கிளினிகல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன்' (Clinical Breast Examination) என்பதும் முக்கியம். அதாவது 30 வயதுக்குப் பிறகு, வருடம் ஒருமுறையாவது மருத்துவரை அணுகி, மார்பகங்களைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வதும் அவசியம். அடுத்தது, மேமோகிராம் பரிசோதனை. இது 40 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள் அவசியம் செய்ய வேண்டியது. குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், இன்னும் சீக்கிரமே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்கலாம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகை, மதுப் பழக்கங்களை அறவே தவிர்ப்பது, உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்குவது, சுய மருத்துவம் செய்வதைத் தவிர்ப்பது போன்றவை மிக முக்கியம். நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டியதும் அவசியம். ஆரோக்கியமான இந்தப் பழக்கங்கள் யாவும் புற்றுநோய் ரிஸ்க்கை குறைக்க உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...