Skip to main content

Doctor Vikatan: குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் - முன்கூட்டியே தடுக்க முடியுமா?

Doctor Vikatan: எங்கள் குடும்பத்துப் பெண்களில் இருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. குடும்பப் பின்னணியில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அது பாதிக்கும் ரிஸ்க் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா... என் வயது 45. எனக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா...முன்கூட்டியே தெரிந்துகொண்டு தடுக்க முடியுமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

முதல் விஷயம், நீங்கள் குறிப்பிடும் அந்த உறவினர், உங்களுக்கு ரத்த உறவா, எவ்வளவு நெருங்கியவர் என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அம்மா, பாட்டி, உங்கள் உடன் பிறந்த சகோதரி... இப்படி யாருக்கு புற்றுநோய் பாதித்தது என்பதைப் பாருங்கள்.

அடுத்து, புற்றுநோய் பாதித்த உங்கள் உறவினரின் வயதைப் பாருங்கள். வயதான பிறகு பாதித்ததா அல்லது 50 வயதுக்கு முன்பே பாதித்ததா என்று பாருங்கள். மார்பகப் புற்றுநோய் என்பதால், அது ஒரு மார்பகத்தை மட்டும் பாதித்ததா அல்லது இரண்டு மார்பகங்களையுமா என்றும் பாருங்கள். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான அதே நபருக்கு வேறு புற்றுநோய் பின்னணி ஏதேனும் இருந்ததா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, மார்பகப் புற்றுநோய் தவிர்த்து, சினைப்பைப் புற்றுநோய் இருந்ததா என்றும் பாருங்கள். 

குடும்பப் பின்னணியில் நெருங்கிய உறவுகளுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், அது குறித்த பயம் மற்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக மரண பீதி கொள்ளத் தேவையில்லை. யாருக்கேனும் இப்படிப் புற்றுநோய் வந்திருந்தால், ஜெனடிக் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பிஆர்சிஏ (BRCA) எனப்படும் டெஸ்ட் தேவைப்படலாம். ஜெனடிக் கவுன்சலிங் போகும்போதே, இந்த டெஸ்ட் உங்களுக்கு அவசியமா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இந்த டெஸ்ட்டின் அடிப்படையில், உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்க்கான ரிஸ்க் இருப்பதைத் தெரிந்துகொண்டு, முன்கூட்டியே அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளைச் செய்துகொள்ள முடியும். 

புற்றுநோய் ஆபத்து இருப்பது உறுதியானால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை (Prophylactic oophorectomy) செய்துகொள்ள முடியும்.

அதாவது, புற்றுநோய் ஆபத்து இருப்பது உறுதியானால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை (Prophylactic oophorectomy) செய்துகொள்ள முடியும். இதற்கடுத்து, மார்பகங்களை சுய பரிசோதனை செய்து பார்ப்பது எல்லாப் பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயம். கண்ணாடி முன் நின்றுகொண்டு, மாதம் ஒருமுறையோ, இருமுறையோ, உங்கள் மார்பகங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். இது குறித்த தகவல்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 

இதற்கடுத்து, கிளினிகல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன்' (Clinical Breast Examination) என்பதும் முக்கியம். அதாவது 30 வயதுக்குப் பிறகு, வருடம் ஒருமுறையாவது மருத்துவரை அணுகி, மார்பகங்களைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வதும் அவசியம். அடுத்தது, மேமோகிராம் பரிசோதனை. இது 40 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள் அவசியம் செய்ய வேண்டியது. குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், இன்னும் சீக்கிரமே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்கலாம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகை, மதுப் பழக்கங்களை அறவே தவிர்ப்பது, உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்குவது, சுய மருத்துவம் செய்வதைத் தவிர்ப்பது போன்றவை மிக முக்கியம். நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டியதும் அவசியம். ஆரோக்கியமான இந்தப் பழக்கங்கள் யாவும் புற்றுநோய் ரிஸ்க்கை குறைக்க உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...