Skip to main content

Doctor Vikatan: தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி! - காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. சமீபத்தில்தான் திருமணமானது. எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு, அது கசப்பான அனுபவங்களையே கொடுத்திருக்கிறது. தாம்பத்திய உறவின்போது எனக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது. அது தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிறது. என்னால் உடலளவில் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை நான் இதில் விருப்பமின்றி, என் கணவரைத் தவிர்க்க இப்படிச் செய்கிறேனோ என அவருக்கு ஓர் எண்ணம் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட வலிக்கு என்ன காரணம்... இதற்குத் தீர்வுகள், சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கு, 'டிஸ்பெரூனியா' (Dyspareunia ) என்று பெயர். அதாவது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏற்படுகிற ஒருவித வலி.  இந்த வலியின் பின்னணியில் உளவியல் மற்றும் உடலியல் காரணங்கள் எதுவும் இருக்கலாம்.

தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம்.

தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். அதேபோல மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் வெஜைனாவில் வறட்சி ஏற்படுவது சகஜம்.

திருமண வாழ்க்கை (Representational Image)
எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும்.

ஹார்மோனல் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்கு முக்கியமான காரணம். சில பெண்களுக்கு வெஜைனாவில் கசிவு இல்லாததாலும் வறட்சியும் தாம்பத்திய உறவின்போதான வலியும் இருக்கும். 

வெஜைனாவில் ஏற்படுகிற தொற்று, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படுகிற தொற்று போன்றவை இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவின்போது வலி இருக்கும்.  எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதையே 'எண்டோமெட்ரியோசிஸ்'  என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது

அடுத்தது வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு. முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு  உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் கணவரின் ஒத்துழைப்பும்,  அவர் தன் மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.  'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது, தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சம்பந்தப்பட்ட பெண் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். தவிர, ஃபைப்ராய்டு, சினைப்பை கட்டிகள் உள்ள நிலையில், மிகவும் தீவிரமான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம்.  மன அழுத்தமும் முக்கிய காரணம். 

இவை எல்லாவற்றுக்குமே தீர்வுகள் உண்டு. வெஜைனா வறட்சிக்கு, லூப்ரிகேஷன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். மெனோபாஸ் காலத்து வறட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு, ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும்.  வெஜைனிஸ்மஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. இதற்கெல்லாம் முன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். தாம்பத்திய உறவின் போது வலியை உணர்வதாகச் சொன்னால், அந்தப் பெண்கள் பொய் சொல்வதாக நினைக்கக்கூடாது. அதற்கு கவனம் கொடுத்து மருத்துவரை அணுகினால், சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...