Skip to main content

Doctor Vikatan: 10 வருடங்களாக குழந்தையில்லை... ஐவிஎஃப் சிகிச்சை உடனே பலன் தருமா?!

Doctor Vikatan: என் வயது 35. பத்து வருடங்களுக்கு முன் திருமணமானது. இதுவரை கர்ப்பம் தரிக்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து மாத்திரைகள் எடுத்தும் பலனில்லை. இனி மருந்து, மாத்திரைகள் பலனளிக்காது, ஐவிஎஃப் சிகிச்சைதான் ஒரே தீர்வு என்கிறார்கள் உறவினர்கள். ஐவிஎஃப் சிகிச்சையில் உடனே பலன் கிடைக்குமா... நம்பி செய்து கொள்ளலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.  

மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்

பத்து வருடங்களாக குழந்தையில்லை என குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்களுக்கோ, உங்கள் இணையருக்கோ உள்ள உடல்நலக் கோளாறுகள், நோய் வரலாறு, வேறு பிரச்னைகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. குழந்தையின்மைக்காக நீங்கள் என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள், அவை ஏன் பலனளிக்கவில்லை என்ற விவரங்களும் தெரியவில்லை. 

ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்,  சம்பந்தப்பட்ட தம்பதியர்  அந்தச்  சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.  கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருக்கும்நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை தொடங்கப்பட்டால் அந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பப்பை தொடர்பான அடிப்டையான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, அந்தப் பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சையே தேவைப்படாமல், கருத்தரிக்கும் நிலை கூட ஏற்படலாம்.

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு, நீர்க்கட்டிகள், சாக்லேட் கட்டிகள், தொற்று  உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவை முதலில் சரிசெய்யப்பட வேண்டும். எளிமையான லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி முறையிலேயே இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து விட முடியும்.  இதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2  முதல் 3 மாத ஓய்வு கொடுத்து, புண்ணெல்லாம் முழுமையாக ஆறிய பிறகு ஐவிஎஃப் சிகிச்சை தேவையாக இருந்தால் அது பரிந்துரைக்கப்படும்.

குழந்தையின்மை

கர்ப்பப்பையில் மட்டுமல்ல சில நேரங்களில் கருக்குழாய்களில் அடைப்பு இருக்கலாம். கருமுட்டைகள் உருவாவதில் பிரச்னைகள் இருக்கலாம். கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காகவும்  ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகே ஐவிஎஃப் தேவையா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும். இப்போதே 35 வயது என்கிறீர்கள்... இனியும் தாமதிப்பது சரியல்லை. நம்பகமான மருத்துவரை அணுகி, அவசியமான பரிசோதனைகள், தேவையான சிகிச்சைகளை உடனடியாகத் தொடங்குங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...