Skip to main content

Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.

குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம்.

நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும்.  பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும்.  உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது  நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும். 

விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாலோ, அதிக காரமுள்ள உணவுகளாலோ, மது அருந்துவதாலோ வரலாம்.

hiccupping | விக்கல்
கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும் விக்கல் வரலாம்.

சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம்.  திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும். 

அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். ஆண்களுக்கு பெண்களைவிட விக்கல் அடிக்கடி வரும்.

மன ரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும். 

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும்.  மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும்.  கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.  ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். 

தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும்.
தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும்.

இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் (Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும். மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...