Skip to main content

Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?

Doctor Vikatan:  எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அளவுக்கதிகமாக பருக்கள் வருகின்றன. எப்போதும் போல பயத்த மாவும் கடலை மாவும் உபயோகித்தாலே போதுமா, பருக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

முதல் விஷயம், இத்தனை வருடங்களில இல்லாமல் உங்களுக்கு திடீரென பருக்கள் வர என்ன காரணம் என்பதை முதலில் பாருங்கள். 

ஆரோககியமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படை சரியான உணவுப்பழக்கம். அதிக மாவுச்சத்தும் இனிப்பும் பதப்படுத்திய உணவுகளும் பால் பொருள்களும் உள்ள உணவுப்பழக்கம் பருக்களைத் தூண்டும். 

பருக்களை ஏற்படுத்துபவை ஒருவகை பாக்டீரியா. சருமத்தில் அதிக எண்ணெய்ப்பசை சுரந்தால் அதை உண்பதற்காக பாக்டீரியா கிருமிகள் முன்வரும். எனவே, சருமத்தின் எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்துகிற மாதிரியான மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபேஸ்வாஷ் போன்ற புற சிகிச்சைகளை நாடலாம்.

இவற்றில் உங்களுக்கு எது சரி என்பதை உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பார்த்த பிறகுதான் மருத்துவரால் முடிவு செய்ய முடியும்.

ஆரம்பநிலை என்றால் புறப்பூச்சுகளின் மூலமே சமாளிக்கப் பார்க்கலாம்.  அதுவே, பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால்  உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும். 

ஃபேஸ்வாஷ்
பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும்.

தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரியாக வைத்துக்கொள்ளலாம். பருக்கள் வராமல் தடுக்க முறையான சருமப் பராமரிப்பும் முக்கியம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட், நியாசினமைடு போன்றவை உள்ள ஃபேஸ்வாஷ், க்ரீம்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும்.

வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்துவது சிரமம். அப்படிப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றினால் இருக்கும் பருக்கள் மேலும் பெரிதாகி, சீழ்க்கட்டிகளாகி, பிறகு தழும்புகளும் நிரந்தரமாகிவிடும். எனவே, முதலில் சரும மருத்துவரை சந்தித்து உங்கள் பருக்களின் தீவிரத்துக்கேற்ப அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள்.

உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.  பயத்த மாவும் கடலை மாவும் பருக்கள் போக உதவாது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...