Skip to main content

Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.  

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே இல்லை.

கொழுப்பில் பலவிதங்கள் உள்ளன. நம் சருமத்துக்குக் கீழே, அதாவது கழுத்து, இடுப்பு, மார்பு என உடல் முழுவதும் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புக்கு 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( subcutaneous fat ) என்று பெயர். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  இதுதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்புத் திசுக்களுக்கும், கொலஸ்ட்ரால் எனப்படுகிற கொழுப்புச்சத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

கொலஸ்ட்ரால் என்பது நம் கல்லீரலில் இயற்கையாக உருவாகக்கூடியது. இது ஒருவருக்கு 100 கிராம் ரத்தத்தில் 200 முதல் 250 மில்லிகிராம் அளவுதான் இருக்க வேண்டும். இந்தக் கொழுப்புச்சத்தை உருவாக்குவதே கல்லீரல்தான்.

இது நம் உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. நம் மூளையும் நரம்புகளும் சரியாக இயங்க உதவுகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கிறது.

கொலஸ்ட்ரால் டேட்டா

எனவே, பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்ற எண்ணமே தவறு. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது பரம்பரைத் தன்மை. ஒருவரின் மரபணுக்கள், கல்லீரலின் செயல்பாடு, அதன் உற்பத்தித் திறன் போன்றவற்றைப் பொறுத்தது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு 80 சதவிகிதம் இதுதான் காரணம்.

மீதி 20 சதவிகிதம் என்பது ஒருவரது உணவுப்பழக்கத்தினால் வருவது.  பொதுவாக சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் கிடையாது. அசைவ உணவுகளில்தான் அது அதிகம். அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடும்போது அளவுக்கதிகமாக கொலஸ்ட்ரால் சேர்கிறது. எனவே, ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு எப்படி இருக்கிறது என்பதை தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான பிரத்யேகப் பரிசோதனைகளின் மூலம்தான் கண்டறிய முடியும்.

குடும்பப் பின்னணியில் கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாத பாதிப்பு ரிஸ்க் உள்ளவர்களும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையோடு கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து பார்த்து அதன் அளவைத் தெரிந்துகொள்ளலாம். அதிகமிருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...