Skip to main content

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு 'வேப்பங்காரம்' என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு, தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த வேப்பங்காரம் கொடுக்கலாம்.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேம்பு நம் மருத்துவத்தில் முக்கியப் பொருளாக இருந்திருக்கிறது. அது தொல்காப்பியத்தில்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வளவு பழைமையான, பாதுகாப்பான மருந்து வேம்பு.

வேப்பங்கொழுந்து 5 எண்ணிக்கை, ஒரு மிளகு, 10 சீரகம் ஆகியவற்றை நன்கு நுணுக்கி சுத்தமான, வெள்ளைத் துணியில் கட்டி முடிந்துகொள்ளவும்.  அதை  15 மில்லி தாய்ப்பாலில் ஊறவைக்கவும். 

குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள்.

குழந்தைக்கு எண்ணெய் தடவும்போதே இதை ரெடி செய்துவிட வேண்டும். பிறகு குழந்தையைக் குளிப்பாட்டி முடிக்கும்வரை இந்த மருந்து, தாய்ப்பாலில் ஊறிக்கொண்டிருக்கும்.

குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள்.

வேப்பங்காரம் கொடுத்த சில நொடிகளில், குழந்தைக்கு சளி கட்டியிருந்தால், அதைக் கக்கி விடும். பிறகு அதைச் சுத்தம் செய்து, குழந்தையைத் துடைத்து எடுப்பார்கள். இது காலங்காலமாக கிராமங்களில் பின்பற்றப்படுகிற விஷயம்தான். பயப்படத் தேவையில்லை.

வேப்பங்கொழுந்து உள்ளிட்ட மருந்துப் பொருள்களை நுணுக்குவது, தாய்ப்பாலை எடுப்பது, ஊறவைப்பது என எல்லாவற்றையும் மிகமிகச் சுத்தமாகக் கையாள வேண்டியது அவசியம்.

வேப்பிலை
வேப்பிலை

பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்துவோம். அந்தக் குழந்தையின் குடலானது வாரந்தோறும் வளர்ச்சி அடையும்.

அந்த மாற்றங்களால் குழந்தையின் வயிற்றில் வாய்வு சேரும். திடீர் திடீரென குழந்தை வலியால் அழும். அந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வேப்பங்காரம் உதவும்.

நெஞ்சில் சளி சேராமல் தடுக்கும். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.  12 வயது வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம். வயதாக, ஆக, வேப்பங்கொழுந்து,  சீரகத்தின் எண்ணிக்கையை ஐந்து, ஐந்தாகவும், மிளகின் எண்ணிக்கையை ஒன்றிரண்டாகவும் அதிகரித்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் மாமியார் கொடுக்கும் இந்த வேப்பங்காரம், குழந்தைக்கு நிச்சயம் நல்லதுதான் செய்யும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...