Skip to main content

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?

-ராஜா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது.

எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு.

அதுவும் அந்த நபர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய நபராக இருந்தால் இது இயல்பாக நடக்கும்.

நீரிழிவு பாதித்த ஒரு நபர், அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் கழிப்பது ஏன் என்பதை கவனிக்க வேண்டும்.  அவர் சாதாரண நபரைவிடவும் அதிக முறை சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு 'கிளைக்கோசூர்யா' (Glycosuria) என்று பெயர்.

உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது, அந்த குளுக்கோஸானது, செல்களுக்குள் உள்ள நீரை எல்லாம் வெளியே எடுத்து, அதிக அளவில் சிறுநீரை உருவாக்குவதால்தான், சர்க்கரைநோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. 

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.

கிளைக்கோசூர்யா என்ற நிலை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் 'பாலியூரியா' (Polyuria) என்ற நிலையை உருவாக்கும்.  நீரிழிவு பாதித்த ஒருவர், தன் ரத்தச் சர்க்கரை அளவை எந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது இதில் முக்கியம். 

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.

அப்படி கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது, சராசரியாக ஒரு நாளைக்கு 6 முறை சிறுநீர் கழிக்கும் நிலையானது, 12 முறையாக மாறலாம். இரவிலும் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்

உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதேபோல சிறுநீர்ப் பையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை புராஸ்டேட் பாதிப்பு இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி வெளியேறலாம். எனவே, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுபவர்கள், அதற்கான காரணத்தை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதே சரி.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...