Skip to main content

Doctor Vikatan: நெஞ்சுவலி, இசிஜி நார்மல்; அதைத்தாண்டி இன்னொரு டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan: நான் 50 வயது பெண். எனக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவரை சந்தித்தேன். இசிஜி பரிசோதனையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும், ட்ரோபோனின் என்ற பரிசோதனை செய்யச் சொன்னார்கள். இசிஜி நார்மல் என்ற நிலையில், இந்த டெஸ்ட் எதற்கு, இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்
கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒரு நபருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவரை அணுகும்போது முதலில் இசிஜி பரிசோதனை செய்யப்படும்.  அதையடுத்து ட்ரோபோனின் பரிசோதனை செய்யச் சொல்வோம். ட்ரோபோனின் என்பது நம் இதயத்தின் தசைகளில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.

இதயத்தின் திசுக்கள் பாதிக்கப்படும்போது அல்லது  உடலில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் எதிர்பாராத விதமாக அல்லது முன்கூட்டியே இறந்து போகும் 'நெக்ரோசிஸ்' நிலையில் இந்தப் புரதமானது, ரத்தத்தில் கலக்கும்.

இதில்  ட்ரோபோனின் I (Troponin I) மற்றும்  ட்ரோபோனின் T (Troponin T) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டில் எந்த வகை ட்ரோபோனின் புரதமானாலும் சரி, அது ரத்தத்தில் கலக்கும்போது மிக நுண்ணிய அளவு, அதாவது நானோகிராம் அளவில் இருந்தாலும்கூட இப்போது ஸ்ட்ரிப் டெஸ்ட் என்ற பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.

 மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.
மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.

நெஞ்சுவலி ஏற்படும்போது, இசிஜி பரிசோதனையில் நார்மல் என்று காட்டினாலும், ட்ரோபோனின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம். 

இசிஜி பரிசோதனையில் மாறுதல்கள் தென்பட்டாலும் ட்ரோபோனின் பரிசோதனை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

ட்ரோபோனின் அளவு அதிகம் என்று தெரியவரும்போது அந்த நபருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதற்கான அலெர்ட் மெசேஜாகவும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ட்ரோபோனின் அளவானது, ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

நெஞ்சுவலி
நெஞ்சுவலி

ட்ரோபோனின் புரதமானது 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை ரத்தத்தில் இருக்கும். அதன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கும்போது, ஹார்ட் அட்டாக் ரிஸ்க்கை தெரிந்துகொள்வதும் எளிதாகிறது. மற்ற நேரங்களில் ட்ரோபோனின் பரிசோதனை அவசியப்படுவதில்லை.

நெஞ்சுவலி ஏற்படும்போதுதான் அது கவனம் பெறுகிறது. மருத்துவர் அதைச் செய்ய அறிவுறுத்தும்போது அலட்சியம் செய்ய வேண்டியதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...