Skip to main content

எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?

’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான்.

அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, தற்போது பலரையும் படுத்திக்கொண்டிருக்கும் காய்ச்சலின் அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசுகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவ மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.

Seasonal Fever
Seasonal Fever

’’பருவ காலம் மாறுகிற இந்த நேரத்துல சுவாசப்பாதையில தொற்று ஏற்படுத்துற சில வைரஸ்கள் பரவ ஆரம்பிக்கும். இதனால சளி, இருமல், தும்மல், மூக்கொழுதல், மூக்கடைப்பு என்று பிரச்னைகள் வரிசைக்கட்டி வர ஆரம்பிக்கும்.

சுவாசப்பாதை தொற்றுங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல, வேலைபார்க்கிற இடங்கள்ல, கூட்டமா இருக்கிற இடங்கள்ல ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு சுலபமா பரவவும் ஆரம்பிச்சுடும்.

இதனால ஒரு அவுட் பிரேக் சூழல் வந்து, எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வந்த பிறகு, அப்படியே அடங்கிடும்.

இந்த நேரத்துல, இன்ஃப்ளுவன்சா ஏ, ஹெச்1 என்1, ஹெச்3 என்2 வைரஸ்களும் அட்டாக் பண்ண ஆரம்பிக்கும். கூடவே கொசுவால வர்ற சிக்கன் குனியா, டெங்கு மாதிரியான காய்ச்சல்களும் வர ஆரம்பிக்கும்.

Seasonal Fever
Seasonal Fever

சுவாசப்பாதை தொற்று வந்திருந்தால், காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கழுத்துல ரெண்டு பக்கமும் நெறி கட்டுறது ஆகியவை இருக்கும்.

காய்ச்சல் வந்த 48 மணி நேரம் நல்லா ஓய்வு எடுக்கணும். நிறைய தண்ணி குடிக்கணும். கஞ்சி, பழச்சாறு மாதிரி நீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கணும். காய்ச்சல் அடிக்கிறப்போ சிறுநீர் சரியா போகணும். இந்த விஷயத்துல எல்லாருமே கவனமா இருக்கணும்.

எச்சரிக்கைகள் என்று பார்த்தீங்கன்னா மூணு நாளைக்கு மேல விடாம காய்ச்சல் அடிச்சாலும், மூச்சுத்திணறல் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடனும். ஏன்னா, சுவாசத்தொற்று வர்றதுனால நுரையீரல்ல நிமோனியா தொற்று ஏற்படலாம்.

குழந்தைகளும் சரி, வளர்ந்தவங்களும் சரி, எதுவுமே சாப்பிட முடியாம சோர்வா இருப்பாங்க. சிலருக்கு சிறுநீர் சரியா போகாது. இந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடணும்.

அங்கு பரிசோதனைகள் மூலம் வந்திருக்கிறது நிம்மோனியான்னு தெரிஞ்சுதுன்னா அதற்கான சிகிச்சைகளை கொடுக்க ஆரம்பிப்பாங்க.

நிம்மோனியா விஷயத்துல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும்.

முதியவர்கள்ல சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல்ல பிரச்னை இருக்கிறவங்களும் கவனமா இருக்கணும்.

 டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

காய்ச்சல் சரியானதும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்க ஆரம்பிக்கணும். காய்கறி சூப், அசைவ சூப், பழங்கள் சாப்பிட்டு காய்ச்சலால பலவீனமான உடம்பை தேத்தணும். மத்தபடி இந்த காய்ச்சல் சம்பந்தமா யாரும் பயப்பட தேவையில்லை. இது சாதாரணமா வருஷாவருஷம் வந்து போற காய்ச்சல்தான்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...