Skip to main content

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.

பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன்.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக இயங்கவைக்கும். சரியான நேரத்தில் தூங்கவும், கண் விழிக்கவும் உதவும்.

தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். மன அழுத்தங்களிலிருந்தும் விடுபடலாம்.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

காலை உணவு எடுத்துக்கொள்ளத் தகுந்த நேரம் இது. காலை உணவைத் தவிர்த்தால், சர்க்கரைநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

‘காலை உணவைச் சாப்பிட்டதும், தசைகளுக்கான சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேலை
வேலை

மிகவும் சவாலான செயல்களைச் செய்யவும், துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உகந்த நேரம் இது. இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் திறமையாகச் செயல்பட முடியும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இது உதவும். உடலிலுள்ள செல்களுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும்.

Eating
Eating

மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், 30 நிமிடங்கள் நடப்பது அவசியம். இதனால், தேவையற்ற மன அழுத்தம் நீங்கும்; மதிய நேரத்தில் செய்யும் பணிகளை சிறப்பாகச் செய்யவும் இது உதவும்.

தசைகள் மிகச் சூடான நிலையிலிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் யோகா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் சூடு நீங்கும்; இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

இரவு உணவை 7:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும்.

எழுதுவது, ஓவியம் வரைவது, கைவினைப் பொருள்கள் செய்வது போன்ற ஆக்கபூர்வமான, படைப்புத்திறன் சார்ந்த வேலைகளைச் செய்ய உகந்த நேரம். குறிப்பாக, புதிய சிந்தனைகள் உதிக்கும் நேரம் இது.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணுக் கருவிகளை ஆஃப் செய்ய வேண்டிய நேரம் இது. அவற்றிலிருந்து வெளிப்படும் யு.வி விளக்கொளி, தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் கெடுத்துவிடும்.

தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர், குளிக்க வேண்டும். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். நல்ல தூக்கம் வர வழி செய்யும்.

Sleep
Sleep

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...