Skip to main content

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.

பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன்.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக இயங்கவைக்கும். சரியான நேரத்தில் தூங்கவும், கண் விழிக்கவும் உதவும்.

தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். மன அழுத்தங்களிலிருந்தும் விடுபடலாம்.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

காலை உணவு எடுத்துக்கொள்ளத் தகுந்த நேரம் இது. காலை உணவைத் தவிர்த்தால், சர்க்கரைநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

‘காலை உணவைச் சாப்பிட்டதும், தசைகளுக்கான சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேலை
வேலை

மிகவும் சவாலான செயல்களைச் செய்யவும், துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உகந்த நேரம் இது. இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் திறமையாகச் செயல்பட முடியும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இது உதவும். உடலிலுள்ள செல்களுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும்.

Eating
Eating

மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், 30 நிமிடங்கள் நடப்பது அவசியம். இதனால், தேவையற்ற மன அழுத்தம் நீங்கும்; மதிய நேரத்தில் செய்யும் பணிகளை சிறப்பாகச் செய்யவும் இது உதவும்.

தசைகள் மிகச் சூடான நிலையிலிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் யோகா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் சூடு நீங்கும்; இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

இரவு உணவை 7:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும்.

எழுதுவது, ஓவியம் வரைவது, கைவினைப் பொருள்கள் செய்வது போன்ற ஆக்கபூர்வமான, படைப்புத்திறன் சார்ந்த வேலைகளைச் செய்ய உகந்த நேரம். குறிப்பாக, புதிய சிந்தனைகள் உதிக்கும் நேரம் இது.

எதை, எப்போது செய்ய வேண்டும்?
எதை, எப்போது செய்ய வேண்டும்?

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணுக் கருவிகளை ஆஃப் செய்ய வேண்டிய நேரம் இது. அவற்றிலிருந்து வெளிப்படும் யு.வி விளக்கொளி, தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் கெடுத்துவிடும்.

தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர், குளிக்க வேண்டும். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். நல்ல தூக்கம் வர வழி செய்யும்.

Sleep
Sleep

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...