Skip to main content

Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?

பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.

மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை சாப்பிட்டது செரிமானம் ஆக அந்த குளிர்பானத்தைக் குடிப்பார்கள்.

சிலர், பலமான விருந்து சாப்பிட்டப் பிறகு வருகிற எதுக்களித்தல் மற்றும் வயிறு உப்புசம் சரியாக சோடா குடிப்பார்கள். சிறிது நேரத்தில் ஏப்பம் வந்தவுடன், செளகர்யமாக உணர்வார்கள்.

இது சரியா என சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.

Soda
Soda

''இரைப்பையில் உணவு, தண்ணீர், காற்று மூன்றும் இருக்கும் என அனைவருக்குமே தெரியும். இவை, அதனதன் அளவில் இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மீறி பிரியாணியை ஒரு பிடி பிடித்தால், காற்று இருப்பதற்கு போதுமான இடமில்லாமல் போகும்.

இந்த நிலையில், அந்தக்காற்றானது இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும். அந்தக் காற்றுக்குமிழ் வயிற்றுக்குள்ளும் நெஞ்சகத்திலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அந்தக் காற்றுக்குமிழால் ஏப்பமாக வெளியேறவும் முடியாமல், அபானவாயுவாக வெளியேறவும் முடியாமல் இருக்கும். இந்தக் காற்றானது உதரவிதானத்தை அழுத்தினால், மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்.

இந்த நேரத்தில் காற்று நிரம்பிய குளிர்பானத்தையோ அல்லது சோடாவையோ குடித்தால், இரைப்பைக்குள் இருக்கிற காற்றுக்குமிழியின் வடிவம் மாறி, அது ஏப்பமாக வெளியேறி விடும்.

அளவுக்கதிகமான உணவு
அளவுக்கதிகமான உணவு

இதில் உண்மை என்னவென்றால், நீங்கள் அளவாக சாப்பிடாதது ஒரு தவறு. காற்று நிரம்பிய பானத்தைக் குடித்ததும் தேவையில்லாததுதான்.

அதிகமாக சாப்பிட்ட தவறை, காற்று நிரம்பிய பானத்தைக் குடித்தல் என்னும் இன்னொரு தவறை செய்து ஏப்பமாக காற்றை வெளியேற்றி சரி செய்துவிட்டீர்கள்.

சிலர், சோடா குடித்து ஏப்பம் விட்டால்தான் நன்கு செரிமானம் ஆவதாக நம்புவார்கள். அதையே தொடரவும் செய்வார்கள். இவர்களுக்கு ஏப்பம் விட்டால்தான் திருப்தியாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்தில், 'டாக்டர் எப்போ பார்த்தாலும் ஏப்பம் ஏப்பமா வருது; சங்கடமா இருக்கு' என்பார்கள்.

சோடா குடித்து ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான். இப்போது அதற்கு உங்களைப் பிடித்துவிட்டது என்பேன் நகைச்சுவையாக. ஆனால், சோடா குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இந்தப் பிரச்னைக்கு சிகிச்சையளித்தால் சரி செய்துவிடலாம்.

தவிர, காற்று நிரம்பிய குளிர்பானங்களில் இருக்கிற சர்க்கரை உடலுக்கு நல்லதும் அல்ல. தேவைப்பட்டால் ரசம் குடிக்கலாம்.

உங்கள் வீட்டில் செரிமானமாவதற்கு சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் குடிக்கிற வழக்கம் இருந்தால், அவற்றையும் அருந்தலாம்.

மற்றபடி, செரிமானம் ஆவதற்கும், வயிறு உப்புசத்தை சரிசெய்வதற்கும் சோடா குடித்தல் என்பது வேண்டாத பழக்கம்'' என்கிறார் டாக்டர் பாசுமணி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...