Skip to main content

Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்!

''உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவையிரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், சில வைட்டமின்கள் நமக்கு தேவை.

இதேபோல், இளம் தலைமுறையினர் அதிகம் சொல்கிற மூட் ஸ்விங் (mood swings). உண்மையில் மனித மனத்தின் உணர்வுகள் மகிழ்ச்சி, துக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊசலாட்டத்தன்மையுடன் இருக்கும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒருசிலர் மகிழ்ச்சி வந்தால் தலை கால் புரியாமல் இருப்பார்கள். துக்கம் வந்தால், ஒரு சிலர் சாப்பிடக்கூட செய்யாமல் துக்கத்தில் சுருண்டுபோய் விடுவார்கள்.

இப்படி இல்லாமல் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவும் சில சத்துக்கள் தேவைப்படுகின்றன'' என்கிற மனநல மருத்துவர் டாக்டர் சுபா சார்லஸ், அவைபற்றி விவரித்தார்.

வைட்டமின் மாத்திரை
வைட்டமின் மாத்திரை

''நடுத்தர வயதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, தைராய்டு போன்றவற்றை பரிசோதனை செய்கையில், கூடவே வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 போதுமான அளவு இருக்கிறதா என்றும் பரிசோதிக்க சொல்கிறார்கள், இந்தக் கால மருத்துவர்கள்.

அந்தளவுக்கு இந்த வைட்டமின்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநலனுக்கும் அவசியமாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் விவசாயம் செய்கையில், தினமும் நம் மீது சூரிய ஒளி பட்டது. அதனால் வைட்டமின் டி-யை போதுமான அளவுக்கு உடம்பே தயாரித்துக்கொண்டது. ஆனால், இன்றைக்கு சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது.

பெரும்பாலும் மூடிய ஏ.சி அறைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய இதய நலனில் ஆரம்பித்து மனநலன் வரைக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் டி அவசியம்.

சூரிய ஒளி
சூரிய ஒளி

தற்போது உடலுழைப்புக் குறைந்துவிட்டதும், மூளை உழைப்பு அதிகரித்துவிட்டதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்த மூளை நலமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் பி 12 அவசியம்.

இந்த வைட்டமின் குறைந்தால் உடலில் இரும்புச்சத்தும் குறையும்; ரத்தசோகையும் வரும்.

இந்த 2 வைட்டமின்களுமே நம்முடைய மனதை நிலைப்படுத்துபவை என்பதால், இவற்றை மெடிக்கல் ஷாப்களில், 'ஓவர் த கவுன்ட்டர்' வாங்கி சாப்பிட முடியும். அந்தளவுக்கு முக்கியமான மாத்திரைகள் இவை. அதனால், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வாக உணர்ந்தீர்களென்றால், அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பிரச்னைகளை சொன்னீர்களென்றால், எவ்வளவு நாள், என்ன அளவில் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்குவார்கள்.

தவிர, இந்த இரண்டு வைட்டமின் மாத்திரைகளையும் ஒரு மாதம், இரண்டு மாதம் என சாப்பிட்டு விட்டு நீங்களாகவே நிறுத்தி விடக்கூடாது. இதனால், மறுபடியும் இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் உடலில் ஏற்படலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மனதை நிலைப்படுத்துவதில் மேலே சொன்ன இரண்டு வைட்டமின்களைப்போலவே மெக்னீஷியம் சத்தும் அவசியம். அந்தக் காலத்தில், விவசாயத்தில் மெக்னீஷியம் சல்பேட் அல்லது எப்சம் சால்ட் உரமாக பயன்படுத்தப்பட்டது.

கடலில் உப்பளங்களில் உப்பு விளையும். உப்பை அறுவடை செய்தவுடன், கீழே எப்சம் சால்ட் படிந்திருக்கும். அதை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், கடந்த 50 வருடங்களாக இந்த எப்சம் சால்ட்டில் இருக்கிற மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது.

இதனால், நம்முடைய உணவுகளில் மெக்னீஷியம் சத்து குறைந்துவிட்டது. விளைவு மூட் ஸ்விங். இதற்கு மெக்னீஷியம் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிய பிரச்னைக்கும் மனதளவில் ஒடுங்கிப் போய்விடுகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...