Skip to main content

Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா?

‘வயிறு நிறைய சாப்பிடக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சாப்பாட்டைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியலை...’ - டயட்டை சரியாகப் பின்பற்ற முடியாமல் அவதிப்படும் பலரின் புலம்பல் இது.

பசி எடுக்கும்போது, அதற்கேற்ற அளவு சாப்பிடுவது சரியான பழக்கம்தான் என்றாலும், பசி உணர்வு உண்மையானதா, போலியானதா என்பதைக் கண்டறியவேண்டியது அவசியம்.

பசி
பசி

பசி உணர்வென்பது, எல்லா நேரத்திலும் உடல் சார்ந்த மாற்றங்கள் (Physiological Factors) காரணமாக மட்டுமே ஏற்படுவதில்லை.

சில நேரங்களில் மனரீதியான மாற்றங்களாலும் (Psychological Factors) ஏற்படுகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகையப் பசி உணர்வை ‘போலியான பசி உணர்வு’ (False Hunger) என்று கூறுகிறார்கள்.

உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறையத் தொடங்கும்போது பசி ஏற்படுவது இயல்பு. அப்படி இல்லாமல், சில காரணங்களால் பசி உணர்வு செயற்கையாகத் தூண்டப்படுகிறது.

அது ஏன், அதை எப்படித் தடுப்பது, போலியான பசி உணர்வை எப்படிக் கண்டறிவது? விளக்கமாகப் பேசுகிறார் குடல், இரைப்பை மருத்துவர் சந்திரமோகன்.

hunger

நேரம்: சிலர் அட்டவணை போட்டு, நேரத்துக்குச் சாப்பிடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சாப்பிட்டுவிட்டால், சாப்பாட்டு நேரம் வந்தவுடன் காரணமே இல்லாமல் மீண்டும் அவர்களுக்கு பசியெடுக்கத் தொடங்கிவிடும்.

பரிமாறும் விதம்: `சாப்பாடு வேண்டாம்’ என்று நினைப்பவர்கள்கூட அழகாகவும் புதுமையாகவும் பரிமாறப்படும் உணவைப் பார்த்ததும், தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

* சாப்பாட்டின் மணம்: பசி இல்லையென்றாலும், உணவின் வாசனையே சிலருக்குப் பசி உணர்வைத் தூண்டிவிடும்.

* அதிக கார்போஹைட்ரேட்: உணவில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதனால், சாப்பிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்கத் தொடங்கிவிடும்.

குளிர்ச்சியான சூழலில் சாப்பிடுவது: பசி எடுக்கும்போது, உடலின் கலோரி அளவு குறையத் தொடங்கி, உடலின் வெப்பநிலை குறையும். பசி அடங்கியதும், வெப்பம் சீரான நிலைக்கு வந்துவிடும்.

குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிப்பது மிகவும் மெதுவாக நடக்கும். பசி அடங்குவதற்கான நேரமும் அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அளவையும் மீறி, அதிகமாகச் சாப்பிட நேரிடும்.

மேலும் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள், ஏற்கெனவே உட்கொண்ட தரமற்ற உணவு அல்லது குறைவான அளவு உட்கொண்டிருப்பது போன்றவைகூட போலியான பசி உணர்வை ஏற்படுத்தும். ஆக, போலியாகப் பசி ஏற்படும்போது, உணவு உண்ணாமல் நிறுத்திக்கொள்வது நல்லது.’’

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...