Skip to main content

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?

Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை.   எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்க் குளியல் எடுத்தால் முடி உதிர்வது நிற்கும் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உண்மையிலேயே முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எண்ணெய்க் குளியலுக்கு எந்த எண்ணெய் உகந்தது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்

தலத் சலீம்

எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது. 

ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.  

வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது கூந்தலை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ரிலாக்ஸ் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுப்பதால் முடி உதிர்வு குறையும் என்பது உண்மைதான்.

ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிகமிருக்கும். எனவே, உங்கள் மகளை ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கமும் அவசியம்.

எண்ணெய்க் குளியலுக்கு சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

முடி உதிர்வு
முடி உதிர்வு

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும்.  அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும்.

பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆற வைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். 

கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும்.

ஒரு கப் சாற்றுக்கு 3 கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் 2 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்கு கொதிக்க விடவும்.  இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு இதுவும் நல்ல தீர்வளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...