Skip to main content

Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

Doctor Vikatan:  எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுகிறான். அவசரப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டாம் என்று சிலரும், ஆபரேஷன்தான் சரியான தீர்வு என சிலரும் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.  

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நம் உடலில் 'டான்சில்' என்றோர் உறுப்பு உண்டு. வாய்க்கும் உணவுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாதுகாப்பு உறுப்பு அது, சுற்றுப்புற மாசிலுள்ள கிருமிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அந்த உறுப்புதான். 

தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் டான்சில் வழியேதான்  கிருமிகள் உடலுக்குள் செல்லும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காதபடி டான்சில் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதனால் அந்தப் பகுதி வீக்கமடையும். அதனால்  தீங்கு விளைவிக்கும் அந்தக் கிருமி, குழந்தையின் நுரையீரல், வயிறு உள்ளிட்ட வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தடுக்கப்படும். குழந்தைகளின் 11 வயது வரை இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே நோய்க்கு எதிராக டான்சில் முன் அளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

டான்சில் வீக்கம் ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம்.  சில குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் தீவிரமாக இருக்கும். வீக்கம் அதிகரித்த காரணத்தால் சரியாகச் சாப்பிட முடியாது.தண்ணீர் கூட குடிக்க முடியாது. மூச்சு விட சிரமமாக இருக்கும்.  அதை 'ஃபரின்ஜியல் டான்சில்ஸ்' (pharyngeal tonsils)  என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்தால் சிலருக்கு காய்ச்சல் அதிகரிக்கும், சரியாகச் சாப்பிட முடியாது, தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். டான்சில் பழுத்து வீங்கும். அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

டான்சில்ஸ் பாதிப்பு... ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

குழந்தைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, இருப்பிடம் என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டையில் வீக்கம் வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் ஃபிரெஷ்ஷான, சூடான உணவுகளைக் கொடுப்பது, கொதிக்கவைத்து ஆறவைத்த நீர், சுத்தமான காற்றை சுவாசிக்கும்படியான சூழல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு டான்சில் வீக்கம் வராமல் பாதுகாக்கலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே தேவையின்றி டான்சில் வீக்கத்தைச் சரிசெய்ய முடியும்.

ஆனால், ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் குழந்தைக்கு இப்படி வருகிறது, மிகவும் அவதிப்படுகிறது என்ற நிலையில் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதற்கு 'டான்சிலெக்டமி' (Tonsillectomy) என்று பெயர். 

உங்கள் குழந்தைக்கு இப்படி வருகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு மருத்துவர் சொல்வதற்கேற்ப முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...