Skip to main content

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக  வழக்கத்தில் உள்ளதுதானே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

எஸ். ஸ்ரீநிவாஸ்

இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள்.  ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில்  விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம்.

இராசயன கற்பூரம் என்பது, டர்பன்டை ஆயில் (Turpentine oil) தயாரிப்பில் தொழிற்சாலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள். புனிதமானதும் மருத்துவ குணமுள்ளதுமாகப் பார்க்கப்படுகிற கற்பூரம், உண்மையில் சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.  அதன் விளைவாக வலிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான சிகிச்சை கிடைக்காதபட்சத்தில்,  உயிரிழப்புவரை ஏற்படுத்தும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டது, ஆபத்தானது.  குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிக மோசமான பாதிப்புகளையும் மரணத்தையும்கூட ஏற்படுத்தலாம். 

இராசயன கற்பூரம் எளிதில் கிடைக்கும் பொருளாக உள்ளதாலும், இதன் வாசம் பிடிக்கும் என்பதாலும் குழந்தைகள் இதை உட்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. தவிர, பூஜைக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால், தேங்காய், பிரசாதம் உள்ளிட்ட உணவுப்பொருள்களுடன் கலந்துவிடும் அபாயமும் இருக்கிறது. கற்பூரத்தை  நேரடியாகவோ, அது கலந்த உணவுப்பொருள்களையோ உட்கொள்ளும்போது, உடனடியாக ரத்தத்தில் கலந்து அதன் தாக்கம்  மூளையைச் சென்றடையும். மூளையில் இது ஏற்படுத்தும் பாதிப்பால், சில நிமிடங்களில் வலிப்பு ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கத் தவறினால்,  சுவாசத்தை நிறுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

இராசயன கற்பூரத்தை உட்கொள்ளும்போது மட்டுமன்றி, நுகரும்போதும்  சுவாசப்பாதை வழியேவும், சருமத்தில் பட்டால் ரத்தத்தில் கலந்தும் மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதிக அளவிலான பயன்பாடு பேராபத்தை ஏற்படுத்தலாம். வேபரப் களிம்புகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, புரையேறி, மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. 

எனவே, குழந்தைகள் உள்ள வீடுகளில் கற்பூரத்தைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அது அவர்களது கைகளுக்கு எட்டாத இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கற்பூரத்தை நேரடியாகவோ, அது கலந்த மருந்துகளையோ குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தவே கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...