Skip to main content

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக  வழக்கத்தில் உள்ளதுதானே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

எஸ். ஸ்ரீநிவாஸ்

இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள்.  ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில்  விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம்.

இராசயன கற்பூரம் என்பது, டர்பன்டை ஆயில் (Turpentine oil) தயாரிப்பில் தொழிற்சாலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள். புனிதமானதும் மருத்துவ குணமுள்ளதுமாகப் பார்க்கப்படுகிற கற்பூரம், உண்மையில் சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.  அதன் விளைவாக வலிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான சிகிச்சை கிடைக்காதபட்சத்தில்,  உயிரிழப்புவரை ஏற்படுத்தும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டது, ஆபத்தானது.  குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிக மோசமான பாதிப்புகளையும் மரணத்தையும்கூட ஏற்படுத்தலாம். 

இராசயன கற்பூரம் எளிதில் கிடைக்கும் பொருளாக உள்ளதாலும், இதன் வாசம் பிடிக்கும் என்பதாலும் குழந்தைகள் இதை உட்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. தவிர, பூஜைக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால், தேங்காய், பிரசாதம் உள்ளிட்ட உணவுப்பொருள்களுடன் கலந்துவிடும் அபாயமும் இருக்கிறது. கற்பூரத்தை  நேரடியாகவோ, அது கலந்த உணவுப்பொருள்களையோ உட்கொள்ளும்போது, உடனடியாக ரத்தத்தில் கலந்து அதன் தாக்கம்  மூளையைச் சென்றடையும். மூளையில் இது ஏற்படுத்தும் பாதிப்பால், சில நிமிடங்களில் வலிப்பு ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கத் தவறினால்,  சுவாசத்தை நிறுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

இராசயன கற்பூரத்தை உட்கொள்ளும்போது மட்டுமன்றி, நுகரும்போதும்  சுவாசப்பாதை வழியேவும், சருமத்தில் பட்டால் ரத்தத்தில் கலந்தும் மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதிக அளவிலான பயன்பாடு பேராபத்தை ஏற்படுத்தலாம். வேபரப் களிம்புகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, புரையேறி, மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. 

எனவே, குழந்தைகள் உள்ள வீடுகளில் கற்பூரத்தைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அது அவர்களது கைகளுக்கு எட்டாத இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கற்பூரத்தை நேரடியாகவோ, அது கலந்த மருந்துகளையோ குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தவே கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...