Skip to main content

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. வாசின்ஸ்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் E. அருணாசலம் இரண்டு சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Complex High Risk Angioplasty) நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார்.

இந்த பயிலரங்கில், இரத்தக்குழாய்களில் உள்ள இரத்த உரைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் கதிர்களை உமிழ்கின்ற சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம், ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இலக்கு பகுதிகளுக்கு மட்டும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது. இந்தியாவில் ட்ரான்ஸ்-கதீட்டர் செயல்முறையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவர் டாக்டர் I.அருணாசலம் கூறுகையில், “எங்கள் பகுதியில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இது எங்கள் நோயாளிகளுக்கு உலகத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கு ஒரு முக்கியமான படியாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்தி, அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இந்தியாவின் முன்னணி இதய சிகிச்சை நிலையமாக வளர்ந்து, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.”

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹோட்டல் ஆப்பிள் ட்ரீ-யில் நடைபெற்ற லேசர் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னணி இருதய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு, இதயவியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், மருத்துவ முன்னேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உயர்தர இதய சிகிச்சையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...