Skip to main content

Betel Leaf: சளி, இருமலில் ஆரம்பித்து மலச்சிக்கல் வரை... வெற்றிலையின் மருத்துவ பலன்கள்!

வெற்றிலை... வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூல வல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது.

‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன.

வெற்றிலையைப் பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றிலையின் மருத்துவ பலன்கள்குறித்து சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்.

வெற்றிலை
வெற்றிலை

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வெற்றிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சவிக்கால் (Chavicol) என்ற பொருள் உள்ளது. வெற்றிலை, வெப்பத்தை உண்டாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும்; வாய்நாற்றம் போக்கும், பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்க உதவும்; ஆண்மைக்குறைவை நீக்கும். வெற்றிலைச்சாறுடன் தேவையான அளவு தண்ணீர், பால் சேர்த்துக் குடித்து வந்தால் தங்குதடையின்றிச் சிறுநீர் வெளியேறும்.

கொழுந்து வெற்றிலை (ஒன்று), ஐந்து மிளகு சேர்த்துத் தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து எட்டு வாரம் மென்று சாப்பிட்டு வந்தால் இரைப்பை - குடல் வலி, அசிடிட்டி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை குணமாகும். உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும். உடல் சுத்தமாகும். வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்தச் சிகிச்சைக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும் பழுத்த மற்றும் அழுகிய வெற்றிலையைத் தவிர்க்க வேண்டும்.

வெற்றிலை- பாக்கு
வெற்றிலை- பாக்கு

வெற்றிலையைத் தீயில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலைகளை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாதக் குழந்தைக்குக் காலை, மாலை 10 சொட்டுகள் வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். இதேபோல், வெறும் வெற்றிலையைத் தீயில் வாட்டி மார்பில் ஒத்தடம் கொடுத்தால் சளி குறையும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டுச் சூடுபடுத்தி மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும்.

வெற்றிலைச்சாறுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்துத் தேன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம் குணமாகும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இலையை அரைத்துக் கட்டிவந்தால் உடனடிப் பலன் கிடைக்கும். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி, தீயில் வாட்டிக் கட்டிகளின் மீது வைத்துக்கட்டி வந்தால் அவை பழுத்து உடையும்.

வெற்றிலை
வெற்றிலை

குழந்தை பெற்ற பெண்களில் சிலருக்குத் தாய்ப்பால் குறைவாக இருக்கும். இதேபோல் சிலருக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமாகி வலியெடுக்கும். அப்படிப்பட்ட சூழலில் வெறும் இலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துப் பொறுக்கும் சூட்டில் மார்பகத்தில் வைத்துக் கட்டிவந்தால் பலன் கிடைக்கும்.

தேள் கடிப்பதால் ஏற்படும் விஷத்தை முறிக்க இரண்டு வெற்றிலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றை மென்று சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி என்றில்லை... எந்த விஷப்பூச்சிகள் கடித்தாலும் இதுபோல் சாப்பிட்டால் நோய் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை போடுவதை, ‘தாம்பூலம் தரித்தல்’ என்று சொல்வார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தாம்பூலம் தரிக்கும்போது பாக்கு அதிகம் சேர்க்க வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடும்போது சுண்ணாம்பு அதிகமும், இரவு உணவுக்குப் பிறகு தாம்பூலம் தரிக்கும்போது வெற்றிலை அதிகமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதியம் தாம்பூலம் தரிப்பதால் பித்தம் கூடாமல் பாதுகாப்பதுடன் உணவில் உள்ள வாயுவையும் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலை போடுவதால் நெஞ்சில் கபம் சேராமல் பார்த்துக்கொள்ளும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வெற்றிலை ஒரு சர்வரோக நிவாரணி'' என்கிறார் மருத்துவர் ஜீவா சேகர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...