Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை. அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம். அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைக...