Skip to main content

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். 

பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை. 

அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம்.  அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்திருக்கலாம். அவர்கள் பரிசோதனையே செய்திருக்க மாட்டார்கள். அதனால். அந்தப் பிரச்னை இருப்பதே தெரியாமல் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்கள் மலை ஏறும்போதும் பிரச்னை வரலாம். மலை ஏறும்போது இதயத்துடிப்பு அதிகமாகி, இதயத்தின் இயக்கமும் அதிகரிக்கும். அதனால் இதயம் சிரமத்துக்குள்ளாகலாம். 

மலையேற்றம்

எனவே, மலையேற்றம் மாதிரி, உங்களுக்கு அறிமுகமில்லாத புதிய செயல்களில் இறங்கும்போது, எந்தத் தயாரிப்புமின்றி அதைச் செய்யாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதயத்தைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

டிரெட்மில் டெஸ்ட் என்ற எளிமையான பரிசோதனையே போதுமானது. டிரெட்மில்லில் உங்களை நடக்கவிட்டு, உங்கள் இதயத்துடிப்பு எப்படியிருக்கிறது, ரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் அளவும் எப்படியிருக்கிறது என்று கவனிக்கப்படும்.  அதில் எந்தச் சந்தேகமும் பிரச்னையும் இல்லை என்றால், மருத்துவர் உங்களை மலையேற அனுமதிப்பார். ஆனால், அதை உறுதிசெய்யாமல் மலையேற்றத்துக்குத் தயாராக வேண்டாம்.  அப்படியே மலையேறத் தயாரானாலும் அதிக தூரம் மற்றும் நீண்ட நேரம் செல்வதைத் தவிர்த்து, மெள்ள மெள்ள வேகத்தையும் தூரத்தையும் அதிகரிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...