Skip to main content

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி, தாம்பத்திய உறவின் போது வலி வருகிறது. ஆரம்பத்தில் வலி நிவாரணிகள் எடுத்தும் பலனில்லை. கடைசியாக ஒரு மருத்துவர் செக் செய்துவிட்டு, இது சிசேரியன் செய்தபோது ஏற்பட்ட ஒட்டுதல்கள் (C-section adhesions) காரணமாக ஏற்பட்டது என்று சொன்னார். மருந்துகள் கொடுத்திருக்கிறார். குணமாகாவிட்டால் ஆபரேஷன் தேவைப்படலாம் என்கிறார். இது என்ன பிரச்னை.... விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே சிசேரியன் அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டவையாகத்தான் தெரிகின்றன. அதாவது உடலில் திடீரென அசாதாரண அறுவை சிகிச்சை நிகழும்போது, உடலின் உள்ளே ஸ்கார் டிஷ்யூ உருவாகத் தொடங்கும்.

அதாவது, அறுவை சிகிச்சையின் விளைவாக உடலின் இயல்பான திசுக்கள் அழிந்துபோகும்போது, அதை குணப்படுத்த உடல் உருவாக்கும் ஒரு ஃபைப்ரஸ் திசுதான் ஸ்கார் டிஷ்யூ. இது இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இதன் விளைவாக உடலின் உள் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்.

கர்ப்பப்பை, சினைக்குழாய், குடல் என எல்லாமே ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். இதன் காரணமாகத்தான் உங்களுக்கு தொடர்ச்சியாக வலி இருக்கும். வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை ஒருமுறை நடந்தாலே இது போன்ற பிரச்னைகளை நாங்கள் அதிகம் பார்ப்பதுண்டு.

சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கும். அவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்கலாம்.

சிசேரியன் ஆனதிலிருந்து பிரச்னைகள்

இந்தப் பிரச்னையின் அறிகுறியாக சிலருக்கு தொடர்ச்சியான அடிவயிற்றுவலி இருக்கும். சிலருக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படும். சிலருக்கு குடல் பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்னைகள்கூட வரலாம்.

சிலருக்கு முறைதவறிய மாதவிடாய் சுழற்சியும் உடல் கனத்தது போன்ற உணர்வும் இருக்கும். வலி அதிகமாக இருப்பதாகச் சொல்பவர்களுக்கு மருத்துவர்கள் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அவற்றையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டார்கள். ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்கும்போது வீக்கம் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், மருந்துகளின் மூலம் ஸ்கார் டிஷ்யூ பிரச்னையை சரிசெய்ய முடியாது.

லேப்ராஸ்கோப்பி சிகிச்சையின் மூலம் எங்கெல்லாம் திசுக்கள் ஒட்டிக்கொண்டுள்ளனவோ, அவற்றை நீக்கிவிட முடியும். இந்தச் சிகிச்சையை 'அட்ஹெஸ்சியோலைசிஸ்' (Adhesiolysis) என்று சொல்வோம். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கைத் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் தெரியும். ஆனால், சரிசெய்தாலும் மறுபடி அது ஒட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது. எனவே, நீங்கள் முதல் வேலையாக மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னையின் தீவிரத்தைச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு பெயின் கில்லர் தேவைப்பட்டால் அதைப் பரிந்துரைப்பார்.

Doctor

எந்தெந்த வேலைகளைச் செய்தால் வலி அதிகரிக்கிறது என்பதைக் குறித்து வரச் சொல்வார். உதாரணத்துக்கு, பீரியட்ஸின்போது வலி அதிகரிக்கிறதா, தாம்பத்திய உறவின்போதா என்பதைக் குறித்து வர வேண்டும். பிசியோதெரபி, இடுப்புத்தசைகளுக்கான யோகா பயிற்சிகள் போன்றவை உதவும். குடல் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...