Skip to main content

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸின்போதான தலைவலி என்பது மிகவும் சகஜமான விஷயம்தான். அதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது, பீரியட்ஸ் தொடங்கும் முன்போ, அல்லது பீரியட்ஸ் வந்த உடனேயோ குறையும். அதன் விளைவாகவே நீங்கள் தலைவலியை உணர்வீர்கள்.

பீரியட்ஸ் நாள்களில் வரும் தலைவலிக்கு 'மென்ஸ்டுரல் மைக்ரேன்' (Menstrual migraine) என்ற பெயரே உண்டு. இதை 'கேட்டமீனியல் சிம்ப்டம்ஸ்' (Catamenial symptoms) என்றும் சொல்வதுண்டு. அதாவது பீரியட்ஸின்போது மட்டும் ஒருவருக்கு தலைவலி வரும். அதில் ஒருவகைதான் மென்ஸ்டுரல் மைக்ரேன். பீரியட்ஸின்போதான ப்ளீடிங்கை வெளியே தள்ள கர்ப்பப்பையானது சுருங்கும்.  அப்படிச் சுருங்கும்போது புராஸ்டோகிளாண்டின் என்றொரு கெமிக்கல் சுரக்கும். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் அதீத களைப்பு, தலைவலி போன்றவை வரலாம்.

டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் வறட்சி, மனப்பதற்றம், போதுமான அளவு தூக்கமில்லாதது, சாப்பிடாதது போன்றவற்றாலும் தலைவலி வரலாம். ஒரு பக்கத்தில் வலி, கூடவே வாந்தி உணர்வு, வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சல் உணர்வு போன்றவை மென்ஸ்டுரல் மைக்ரேனின்  அறிகுறிகளாக இருக்கும்.

வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம்.

வலியைத் தாங்க முடியாதபோது பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளலாம். வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம். பீரியட்ஸின்போது ஏற்படுகிற சாதாரண தலைவலிக்கு மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளும் உதவும். மருத்துவரைக் கேட்டு அதையும் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு ஈஸ்ட்ரோஜென் அளவை நிலைப்படுத்த வாய்வழியே எடுத்துக்கொள்ளக்கூடிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். ஹார்மோன்களை உள்ளடக்கிய அந்த மாத்திரைகளும் தலைவலியை சரியாக்கும். 

உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது,  போதுமான தூக்கம், யோகா, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் போன்றவை ஓரளவு உதவும். ஹெட்ஏக் டைரி என ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தலைவலி வருகிறது, எத்தனை நாள், எத்தனை மணி நேரம் நீடிக்கிறது என்று குறித்துவையுங்கள்.  மருத்துவரை சந்திக்கும்போது அவை கூடுதல் தகவல்களாக உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...