Skip to main content

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா என யோசியுங்கள்.

‘ஆபீஸுக்கு இன்னைக்கு என்ன டிரெஸ் போடலாம்?’ என யோசித்துக்கொண்டே செல்போனை பாத்ரூமில் மறந்து வைத்திருப்போம்.

தையோ எடுக்க ஒரு ரூமுக்குப் போய், `இப்ப எதுக்கு இங்க வந்தோம்?’ என யோசித்துக் கொண்டிருப்போம்.

ஞாபக மறதியா அல்லது வியாதியா?
ஞாபக மறதியா அல்லது வியாதியா?

லையிலேயே சீப்பை வைத்துவிட்டு, சீப்பு எங்கே எனத் தேடிக்கொண்டு இருப்போம்.

பாக்கெட்டில் வைத்துக்கொண்டே பர்ஸை தேடிக்கொண்டிருப்போம்.

டுத்தவர் சொல்வதை ‘உம்’ கொட்டியபடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியாது. `ஸாரி... என்ன சொன்னீங்க?’ எனக் கேட்டு அசடுவழிவோம்.

`வீட்டுக் கதவை நன்றாகப் பூட்டினோமா?’ என, வரும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வருவோம்.

இவை வழக்கமாக நடக்கும் விஷயங்கள். இதுபோன்ற மறதி, கவனக் குறைவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இது ஏதும் பிரச்னையா? இதைத் தடுப்பது எப்படி? சொல்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

மூளை
மூளை

''பொதுவாக, மறதி என்பது நல்ல விஷயம். எதையுமே மறக்கவில்லை என்றால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இவற்றில் மூளை தனக்குத் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது.

மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தை மறக்கிறோம் என்றால், அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். ஒரு தகவல் நம் மனதில் பதிவாகும்போது, வேறு ஏதாவது கவனச்சிதறல் இருந்தால், அது நம் மூளையில் பதிவது இல்லை. மனஅழுத்தம், மனச்சோர்வு, சூழல் நெருக்கடி, தூக்கமின்மை, மது, சிகரெட் பழக்கம் என கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் காரணமாக மறதி ஏற்படுகிறது.

நினைவுத்திறன்
நினைவுத்திறன்

நினைவுத் திறன் என்பது ரிமோட், ரீசன்ட், இம்மீடியட் என மூன்று வகைப்படும்.

ரிமோட் - இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை நினைவுகூர்வது.

ரீசன்ட் - நேற்று அல்லது கடந்த வாரம் நடந்ததை நினைவில் கொள்வது.

இம்மீடியட் - கடந்த நிமிடம் நடந்தது, இப்போது செய்யப்போவது போன்றவற்றை உடனுக்குடன் நினைவில்கொள்வது.

இதில் ‘இம்மீடியட் மெமரி’ என்பது, செய்யும் செயலில் முழுக்கவனமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம் மனதில் பதியும். கவனச்சிதறல் இருக்கும்போது, பதிவாகாது.

ந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள்.

செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.

நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.

வ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

ழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம்.

ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்...
ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்...

ணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஷாப்பிங்குக்காக வெளியே செல்லும்போது, லிஸ்ட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நீங்களாக ஞாபகப்படுத்தி பொருள்களை வாங்குங்கள். இறுதியாக செக் செய்யுங்கள்.

குறைந்தது ஐந்து பேரின் எண்களாவது நினைவில் இருக்கட்டும். இது, உங்களுக்கு ஞாபகசக்தியைக் கொடுப்பதோடு, அவசரத்தில் கை கொடுக்கும்.

வனச்சிதறலைக் கட்டுப்படுத்த, ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

ஸ்போர்ட்ஸ், நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். ஞாபகமறதி வியாதி கிடையாது'' என்று முடிக்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...