Skip to main content

Fever: தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; எப்படி பரவுகிறது; தடுக்க முடியுமா?

ப்பானிய மூளைக்காய்ச்சல் தமிழ்நாட்டிலும் பரவிக்கொண்டிருக்கிறது என்கிற ஆய்வு முடிவு ஒன்று கடந்த சில தினங்களாக பலருடைய கண்களிலும் தென்பட்டிருக்கும். விளைவாக, 'ஏற்கெனவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டது என்கிற பயத்தில் இருக்கிறோம். இப்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்கிற புது வியாதியை சொல்லி பயப்படுத்துகிறீர்களே' என்கிற பயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காரணங்களையும் தீர்வுகளையும் தெரிந்துகொண்டால் வருமுன் தடுக்கலாமே... இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

க்யூலெக்ஸ் கொசு
க்யூலெக்ஸ் கொசு

''ஜப்பானிய மூளைக்காய்ச்சல் புதிய நோய் கிடையாது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் (Japanese encephalitis - JE) என்கிற பெயரில் ஆசிய நாடுகளுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நோய்தான் இது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் என்பது ஒரு வைரஸ். இந்த வைரஸ் க்யூலெக்ஸ் என்ற கொசுவிலும், பன்றிகளின் உடலிலும், சில பறவைகளின் உடலிலும் வாழக்கூடியது.

விவசாயம் செய்கிற கிராமப்பகுதிகளில் இந்த நோய் அதிகமாக தாக்கும். ஏன் தெரியுமா? விவசாயம் செய்யப்படுகிற இடங்களில் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். க்யூலெக்ஸ் கொசுக்கள் கிணறுகளில், வயல்வெளிகளில், பன்றிகளின் வாழ்விடங்களிலும்தான் வாழும்.

வைரஸ் தொற்று ஏற்பட்ட க்யூலெக்ஸ் கொசு கடித்தால்தான் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். அதேபோல, இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்த கொசு, ஆரோக்கியமாக இருக்கிற இன்னொருவரைக் கடித்தால் அவருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். மற்றபடி, மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது.

வைரஸ் தொற்று அடைந்த க்யூலெக்ஸ் கொசு கடித்தால் மட்டுமே இந்தத் தொற்று மனிதருக்குப் பரவும். டெங்கு, மலேரியா பரவுவதைப்போலதான் ஜப்பானிய மூளைக்காய்ச்சலும் பரவும்'' என்றவரிடம் , அந்த ஆய்வில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நகரங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்றோம்.

வயல்வெளி
வயல்வெளி

''அதற்குக் காரணம் நகரங்கள் விரிவடைந்துக்கொண்டிருப்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு வருவதும், நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்குச் செல்வதும் இப்போது அடிக்கடி நிகழ்கிற ஒன்றாகிவிட்டது. அதனால், இந்த கொசுக்கடி தொற்று பரவிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் காய்ச்சல் வந்தால் 99 சதவிகிதம் பேருக்கு, காய்ச்சல், தலைவலி, வாந்தி என்று சரியாகி விடும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டால் காய்ச்சலின்போது பிதற்றுவார்கள்; கை, கால்கள் செயலிழந்து பக்கவாதம்போல ஏற்படலாம். பின்னர் வலிப்பு, கோமா, மரணம் என்று ஏற்படலாம். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்குமே இத்தனை பிரச்னைகளும் வருமா என்றால், இல்லவே இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இது அரிதிலும் அரிதாக மட்டுமே நிகழும்.

திடீரெனப் பரவும் காய்ச்சல்
திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், கரூர் போன்ற மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

அதே நேரம், இப்படி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சலின்போது வந்த வலிப்பு, பக்கவாதம், சிந்தனைத்திறன் குறைவுபடுதல் போன்ற பக்க விளைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும். ஆனால், வயல்வெளிகளில் இதைக் கட்டுப்படுத்துவது கடினம். வாரம் ஒரு நாளாவது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சாமல் விட வேண்டும். இதை இடைவிட்டு செய்யும் பாசனமுறை என்று அழைக்கிறோம். இதன் மூலம் கொசு உற்பத்தி ஆவதைக் கட்டுப்படுத்த முடியும். யூரியா உரத்தில் வேம்பைக் கலந்து போடுவதும் பயன் தரும்.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா
டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுப்பூசி மூலம் வராமல் கட்டுப்படுத்தலாம். முதல் டோஸ் குழந்தையின் 9-வது மாதத்திலும், இரண்டாவது டோஸை 16 முதல் 24-வது மாதத்துக்குள்ளும் செலுத்திவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அது மரணம் வரைக்கும் ஏற்படுத்தாது. இந்தத் தடுப்பூசிகள் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது'' என்கிற கூடுதல் தகவலையும் சொல்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...