Skip to main content

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை.  சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உணவுப்பழக்கம் உதவுமா... எப்படிப்பட்ட உணவுகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மங்கு எனப்படுகிற பிக்மென்ட்டேஷன் பிரச்னை இப்போது பலரையும் பரவலாக பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், கருந்திட்டுகளைப் போக்க, வைட்டமின் ஏ, சி, ஈ என மூன்று வைட்டமின்கள் மிக முக்கியம். இவற்றை நீங்கள் சப்ளிமென்ட் வடிவிலும் எடுக்கலாம். இவற்றில் வைட்டமின் ஏ சப்ளிமென்ட்டை நீண்டகாலத்துக்கு எடுக்கக்கூடாது. மருத்துவப் பரிந்துரை முக்கியம்.

உணவுகளின் மூலம் மங்கு பாதிப்பிலிருந்து மீளலாம். அதாவது கருந்திட்டுகளைப் போக்க உதவும் மேற்குறிப்பிட்ட வைட்டமின்களை உணவுகளின் மூலமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ சத்துள்ள பப்பாளி, கேரட், பீட்ரூட், கீரை போன்றவற்றையும், வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, கொய்யா, கிவி, நெல்லிக்காய் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஈ சத்துக்காக பாதாம் சாப்பிடலாம். முதல்நாள் இரவு பத்து பாதாம் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிச் சாப்பிடலாம்.

சருமத்தில் கருமையை ஏற்படுத்தும் மங்கு

சருமத்தின் கருந்திட்டுகளைப் போக்குவதில் மாதுளம்பழம் மிகச் சிறப்பாக வேலை செய்யும். ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடலாம். பீட்ரூட், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

ப்ளூ பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னைக்கு மிகச் சிறந்தவை. வெண்டைக்காய், கீரை, பீன்ஸ் என பச்சைக் காய்கறிகள் எல்லாமே இந்தப் பிரச்னைக்கு ஏற்றவைதான்.

பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து  தினமும் 150 மில்லி அளவுக்கு, 15 நாள்களுக்குக் குடித்துவந்தால், நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம். 

புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். கண்களைச் சுற்றி கறுப்பாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கலாம். அவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டீஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரும் மிகச் சிறந்தது.

புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும்.

முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, சருமத்தின் கருந்திட்டுகள் மாறுவதை உணர்வீர்கள்.

இந்த எல்லாமே உள்ளுக்குச் சாப்பிடுபவை. இவற்றில் எதையும் சருமத்தில் தடவ முயல வேண்டாம். எந்தப் பொருள், யாருக்கு, எப்படிப்பட்ட அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. எனவே, சருமத்துக்கு வெளிப்பூச்சு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே எதையும் பின்பற்றவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...