Skip to main content

Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?

Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும் அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமா... தவறுதலாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, எல்லோருக்கும் உயிரிழப்பு ஏற்படுமா... ரத்தப் பிரிவு மாற்றம் குறித்து சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்...

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

வெவ்வேறு வகையான ரத்தப் பிரிவுகள் இருப்பதையும், அவை மனிதருக்கு மனிதர் வேறுபடுவதையும் நாம் அறிவோம். யாருக்கு, எந்த ரத்தப் பிரிவு இருக்கிறதோ, அது எந்த ரத்தப் பிரிவுடன் பொருந்தும் என்பதற்கேற்பதான் அவருக்கு ரத்தம் ஏற்றுவதோ, அவரிடமிருந்து ரத்த தானம் பெறுவதோ முடிவு செய்யப்படும். இவற்றில் ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் 'யுனிவர்சல் டோனர்' (universal donor) என்று சொல்கிறோம்.

எல்லோருக்கும் எல்லாவகை ரத்தப் பிரிவுகளும் ஏற்றுக்கொள்ளாது. அதை   இன்காம்பாட்டிபிலிட்டி (Incompatibility) என்று சொல்கிறோம். பெரும்பாலும் இந்தப் பிரச்னை ரத்தம் ஏற்றும்போது வரும். 

பொதுவாக அறுவைசிகிச்சை செய்யும்போதோ, டெலிவரி, விபத்து போன்ற எமர்ஜென்சி சிகிச்சையின்போதோ ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும்.

இது தவிர, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பில்கூட சிலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது போன்ற தருணங்களில் 'இம்யூன் ஹீமோலைட்டிக்  ரியாக்ஷன்' ( Immune Hemolytic Reaction) என்ற பிரச்னை வரலாம்.  அதாவது ஒரு நபருக்கு ரத்தம் ஏற்றும்போது, அது தானம் செய்பவரின் ரத்த செல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

அதனால் 'ஹீமோலைசிஸ்' ( Hemolysis) என்ற பிரச்னை வரலாம்.  அதாவது ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இதை 'அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (acute hemolytic reaction) என்று சொல்வோம்.

ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம்.

அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன் பாதிப்பானது ரத்தம் ஏற்றிய 24 மணி நேரத்துக்குள் ஏற்படும். சிலருக்கு 6 முதல் 12 மணி நேரத்துக்குள்ளும் வரும். 'டிலேடு ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (delayed hemolytic reaction ) என இன்னொரு வகை இருக்கிறது.

இது 24 மணி நேரத்துக்குப் பிறகு 72 மணி நேரத்துக்குள் வரக்கூடியது. எந்த ரத்தப் பிரிவு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியாமல் ஒவ்வாத ரத்தப் பிரிவை  ஏற்றும்போது இத்தகைய பிரச்னைகள் வரலாம்.

இந்த இணக்கமின்மை பாதிப்பானது  சருமத்தில் தடிப்புகள், சுவாசக் கோளாறு, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது என பலவித அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். சில அறிகுறிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிரே போகும் அபாயம் உண்டு. 

இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான் இன்று ரத்த மாற்று சிகிச்சை என்பது மருத்துவத்தில் தனிப்பிரிவாகவே இயங்குகிறது. அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள்தான் இதைப் பார்த்துக்கொள்வார்கள்.

இணக்கமில்லாத ரத்தப்பிரிவு என்றில்லை, இணக்கமுள்ள ரத்தப்பிரிவை ஏற்றும்போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் கேள்விப்பட்ட செய்தியில் குறிப்பிட்டபடி, அது உயிரிழப்புவரை கொண்டுசெல்லும் அபாயமும் உண்டு. எனவே, ரத்தம் ஏற்றுவதை முறையாக, மிக மிக ஜாக்கிரதையாகச் செய்யாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...