Skip to main content

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள் கால்சியம் தேவைக்கு பாலையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்

பாலில் புரதம், கால்சியம் உண்டு என்றாலும் அதை எல்லோருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது.  பால் மற்றும் பால் பொருள்கள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான்.

சமீப காலமாக நிறைய பேருக்கு பால் அலர்ஜி ஏற்படுவதைப் பார்க்கிறோம். 'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' (Lactose intolerance) எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

தனக்கு அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு பிரச்னைகள்தான் தொடரும். அதேபோல எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே நாங்கள் அறிவுறுத்துவோம்.

முகத்தில் பருக்கள் வரும் தன்மை கொண்டவர்களுக்கும் பாலைத் தவிர்க்கச் சொல்வோம்.  பால் எடுத்துக்கொள்வது, சிலருக்கு பருக்களின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.

செரிமான கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே அறிவுறுத்துவோம். ஆனாலும், இந்த அறிவுரை எல்லோருக்குமான பொதுவிஷயமாக அணுகப்படக்கூடாது.

'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

அவரவர் உடல்நிலை, தேவை, உடல்எடை போன்றவற்றைப் பொறுத்து இது மாறலாம். ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால், அதாவது 150 மில்லி அளவுக்குக் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம்.  பாலாக எடுத்துக்கொள்ளாமல் தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பாலில் மட்டும்தான் கால்சியம் உள்ளது என நினைக்க வேண்டாம். கேழ்வரகு, பசலைக்கீரை என எத்தனையோ உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது. ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைக் கலந்தாலோசித்து அத்தகைய உணவுகளைச் சேர்த்துக்கொண்டாலே கால்சியம் தேவை ஈடுகட்டப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...