Skip to main content

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாக வெளியேறும். இதனால் மாணவர்கள் மத்தியில் தர்மசங்கடமாக உணர்கிறேன்.

இந்தப் பிரச்னைக்கு பயந்து பல நாள்கள் சாப்பிடுவதையே தவிர்க்கிறேன். அடிக்கடி சோடா குடிக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தரக்கூடியதா அல்லது மூட நம்பிக்கையா என்றும் தெரியவில்லை. ஏப்பம் என்கிற பிரச்னைக்கு என்ன காரணம்.. அதை நிரந்தரமாக குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இரைப்பை பகுதியில் சிறிது காற்று இருப்பது தெரியும். அதேபோல சிறுகுடலிலும் சிறிது காற்று இருக்கும். பேசும்போதும், தண்ணீர் குடிக்கும்போது நாம் காற்றை விழுங்குவோம்.

சாப்பிடும்போது பேசுவது, இடையிடையே தண்ணீர் குடிப்பது, டி.வியோ செல்போனோ பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, வேகவேகமாக விழுங்குவது போன்ற பழக்கம் உள்ளவர்கள், தேவைக்கு அதிகமாக காற்றை உள்ளே தள்ளுகிறார்கள். 

காரமான அல்லது ஒவ்வாத உணவைச் சாப்பிட்டு இவர்களுக்கு கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை  அழற்சி வந்திருந்தால், வயிறு இலகுவாக விரிந்துகொடுக்கும் தன்மையை இழந்து டைட்டாகிவிடும். அப்படி டைட்டான ஒன்றை ரிலீஸ் செய்தால்தான் திருப்தி ஏற்படும்.

கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை அழற்சி

கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை இருக்கும்போது உடனே சோடாவை குடித்து காற்றை வெளியேற்றுவதாக நினைக்கிறோம்.  அதாவது அந்தக் காற்றானது ஏப்பமாக வெளியேறும்போது மூளையில் ஒருவித திருப்தி உணர்வு  பதிவாகிறது.

அதை மூளை பிடித்துக்கொள்கிறது. உதாரணத்துக்கு, அலர்ஜி வந்து ஓரிடத்தை சொரியும்போது அதனால் ஏற்படுகிற சுக உணர்வால், அந்த இடம் புண்ணானாலும் மீண்டும் மீண்டும் சொரிந்துகொண்டிருப்பதைப் போன்றதுதான் இது.

என்றோ ஒருநாள் நமக்கு திருப்தியைக் கொடுத்த ஏப்பத்தை நாம் விடாமல் தக்கவைத்துக்கொள்கிறோம். ஏரோஃபேஜியா (Aerophagia) என்றொரு வார்த்தை உண்டு. ஏர் என்றால் காற்று... ஃபேஜியா என்றால் விழுங்குவது. அதாவது தன்னையும் அறியாமல் காற்றை விழுங்குவார்கள். சிகிச்சையின் ஒரு பகுதியாக அதை அவர்களுக்கு வீடியோ எடுத்துக் காட்டுவோம். பிரத்யேக மாத்திரைகள் கொடுத்து இரைப்பையின் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சோடா

உணவுக்குழாயில் காற்றை வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் ஏப்பமாக வெளியேற்றுவோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஸ்பீச் தெரபி,  உணவை எப்படி  விழுங்க வேண்டும் என்பதற்கான பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

சோடா குடிப்பதை மூட நம்பிக்கை என்று சொல்வதைவிடவும், 'முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது' என்று சொல்லலாம். ஏற்கெனவே உள்ளே இருக்கும் காற்றை சோடாவில் உள்ள இன்னும் சிறிது காற்றையும் கொடுத்து, இரண்டும் சேர்ந்து அது ஏப்பமாக வெளியேறும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...