Skip to main content

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாக வெளியேறும். இதனால் மாணவர்கள் மத்தியில் தர்மசங்கடமாக உணர்கிறேன்.

இந்தப் பிரச்னைக்கு பயந்து பல நாள்கள் சாப்பிடுவதையே தவிர்க்கிறேன். அடிக்கடி சோடா குடிக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தரக்கூடியதா அல்லது மூட நம்பிக்கையா என்றும் தெரியவில்லை. ஏப்பம் என்கிற பிரச்னைக்கு என்ன காரணம்.. அதை நிரந்தரமாக குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இரைப்பை பகுதியில் சிறிது காற்று இருப்பது தெரியும். அதேபோல சிறுகுடலிலும் சிறிது காற்று இருக்கும். பேசும்போதும், தண்ணீர் குடிக்கும்போது நாம் காற்றை விழுங்குவோம்.

சாப்பிடும்போது பேசுவது, இடையிடையே தண்ணீர் குடிப்பது, டி.வியோ செல்போனோ பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, வேகவேகமாக விழுங்குவது போன்ற பழக்கம் உள்ளவர்கள், தேவைக்கு அதிகமாக காற்றை உள்ளே தள்ளுகிறார்கள். 

காரமான அல்லது ஒவ்வாத உணவைச் சாப்பிட்டு இவர்களுக்கு கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை  அழற்சி வந்திருந்தால், வயிறு இலகுவாக விரிந்துகொடுக்கும் தன்மையை இழந்து டைட்டாகிவிடும். அப்படி டைட்டான ஒன்றை ரிலீஸ் செய்தால்தான் திருப்தி ஏற்படும்.

கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை அழற்சி

கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை இருக்கும்போது உடனே சோடாவை குடித்து காற்றை வெளியேற்றுவதாக நினைக்கிறோம்.  அதாவது அந்தக் காற்றானது ஏப்பமாக வெளியேறும்போது மூளையில் ஒருவித திருப்தி உணர்வு  பதிவாகிறது.

அதை மூளை பிடித்துக்கொள்கிறது. உதாரணத்துக்கு, அலர்ஜி வந்து ஓரிடத்தை சொரியும்போது அதனால் ஏற்படுகிற சுக உணர்வால், அந்த இடம் புண்ணானாலும் மீண்டும் மீண்டும் சொரிந்துகொண்டிருப்பதைப் போன்றதுதான் இது.

என்றோ ஒருநாள் நமக்கு திருப்தியைக் கொடுத்த ஏப்பத்தை நாம் விடாமல் தக்கவைத்துக்கொள்கிறோம். ஏரோஃபேஜியா (Aerophagia) என்றொரு வார்த்தை உண்டு. ஏர் என்றால் காற்று... ஃபேஜியா என்றால் விழுங்குவது. அதாவது தன்னையும் அறியாமல் காற்றை விழுங்குவார்கள். சிகிச்சையின் ஒரு பகுதியாக அதை அவர்களுக்கு வீடியோ எடுத்துக் காட்டுவோம். பிரத்யேக மாத்திரைகள் கொடுத்து இரைப்பையின் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சோடா

உணவுக்குழாயில் காற்றை வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் ஏப்பமாக வெளியேற்றுவோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஸ்பீச் தெரபி,  உணவை எப்படி  விழுங்க வேண்டும் என்பதற்கான பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

சோடா குடிப்பதை மூட நம்பிக்கை என்று சொல்வதைவிடவும், 'முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது' என்று சொல்லலாம். ஏற்கெனவே உள்ளே இருக்கும் காற்றை சோடாவில் உள்ள இன்னும் சிறிது காற்றையும் கொடுத்து, இரண்டும் சேர்ந்து அது ஏப்பமாக வெளியேறும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...