Skip to main content

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 24 வயதாகிறது. பூப்பெய்தியது முதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம்.

இந்நிலையில் திடீரென மூன்று மாதங்களாக அவளுக்கு பீரியட்ஸ் வரவில்லை. திருமண நேரத்தில் இப்படி ஆனது கவலையாக இருக்கிறது. அவளுக்கு மாத்திரைகள் கொடுத்து பீரியட்ஸை வரவழைக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

இயல்பாக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, திடீரென வராமல் போவதை 'செகண்டரி அமெனோரியா' (Secondary amenorrhea) என்கிறோம். ஒரு பெண்ணுக்கு திடீரென பீரியட்ஸ் வராமல்போகும்போது எழும் முதல் கேள்வி.... அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது. 17-18 வயது தொடங்கி, 46-47 வயது வரையிலான பெண்களுக்கு இந்தக் கேள்வி எழுவது சகஜம்.  உங்கள் மகள் விஷயத்தில் இந்தக் கேள்வி தேவையற்றது என்று எடுத்துக்கொள்வோம்.

25 முதல் 45 வயதுப் பெண்களுக்கு திடீரென ஏற்படும் எடை அதிகரிப்பு, முகத்தில், கை, கால்களில் அதிக ரோம வளர்ச்சி, முகத்தில் அதிக பருக்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சினைப்பைகளை ஸ்கேன் செய்து நீர்க்கட்டிகள் இருக்கின்றனவா என தெரிந்துகொள்ள வேண்டும். 

சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கொரு முறைதான் மாதவிடாய் வரும். 

பீரியட்ஸை வரவழைக்க சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதைப் போன்ற ஆபத்து வேறில்லை. பல வருடங்களுக்கு முன்பு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை மீண்டும் எடுப்பது, வீட்டில் அக்காவோ, அம்மாவோ, தோழிகளோதான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் அதே மாத்திரையை மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது போன்ற தவறுகளை சர்வசாதாரணமாக பெரும்பாலான பெண்கள் செய்கிறார்கள்.

பீரியட்ஸை வரவழைக்கிற மாத்திரைகள், ஹார்மோன்கள் உள்ளவை. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.

பீரியட்ஸை வரவழைக்கிற மாத்திரைகள், ஹார்மோன்கள் உள்ளவை. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.

முன்பு அதே மாத்திரைகளை  எடுத்துக்கொண்டபோது  உங்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது அவை உள்ளிட்ட வேறு உடல்நல பாதிப்புகள் வந்திருக்கலாம். எனவே, அது தெரியாமல் பழைய மருந்துச்சீட்டில் உள்ள மாத்திரைகளை எடுப்பது பேராபத்தை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மாதவிலக்கு சுழற்சியை பாதிப்பதில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. உங்கள் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அது குறித்த பதற்றம், பயம், ஸ்ட்ரெஸ் நிச்சயம் அவருக்குள் இருக்கலாம்.

அதன் காரணமாகவும் பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே, நீங்களாக எந்த மாத்திரைகளையும் வாங்கித் தராமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...