Skip to main content

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 24 வயதாகிறது. பூப்பெய்தியது முதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம்.

இந்நிலையில் திடீரென மூன்று மாதங்களாக அவளுக்கு பீரியட்ஸ் வரவில்லை. திருமண நேரத்தில் இப்படி ஆனது கவலையாக இருக்கிறது. அவளுக்கு மாத்திரைகள் கொடுத்து பீரியட்ஸை வரவழைக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

இயல்பாக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, திடீரென வராமல் போவதை 'செகண்டரி அமெனோரியா' (Secondary amenorrhea) என்கிறோம். ஒரு பெண்ணுக்கு திடீரென பீரியட்ஸ் வராமல்போகும்போது எழும் முதல் கேள்வி.... அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது. 17-18 வயது தொடங்கி, 46-47 வயது வரையிலான பெண்களுக்கு இந்தக் கேள்வி எழுவது சகஜம்.  உங்கள் மகள் விஷயத்தில் இந்தக் கேள்வி தேவையற்றது என்று எடுத்துக்கொள்வோம்.

25 முதல் 45 வயதுப் பெண்களுக்கு திடீரென ஏற்படும் எடை அதிகரிப்பு, முகத்தில், கை, கால்களில் அதிக ரோம வளர்ச்சி, முகத்தில் அதிக பருக்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சினைப்பைகளை ஸ்கேன் செய்து நீர்க்கட்டிகள் இருக்கின்றனவா என தெரிந்துகொள்ள வேண்டும். 

சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கொரு முறைதான் மாதவிடாய் வரும். 

பீரியட்ஸை வரவழைக்க சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதைப் போன்ற ஆபத்து வேறில்லை. பல வருடங்களுக்கு முன்பு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை மீண்டும் எடுப்பது, வீட்டில் அக்காவோ, அம்மாவோ, தோழிகளோதான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் அதே மாத்திரையை மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது போன்ற தவறுகளை சர்வசாதாரணமாக பெரும்பாலான பெண்கள் செய்கிறார்கள்.

பீரியட்ஸை வரவழைக்கிற மாத்திரைகள், ஹார்மோன்கள் உள்ளவை. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.

பீரியட்ஸை வரவழைக்கிற மாத்திரைகள், ஹார்மோன்கள் உள்ளவை. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.

முன்பு அதே மாத்திரைகளை  எடுத்துக்கொண்டபோது  உங்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது அவை உள்ளிட்ட வேறு உடல்நல பாதிப்புகள் வந்திருக்கலாம். எனவே, அது தெரியாமல் பழைய மருந்துச்சீட்டில் உள்ள மாத்திரைகளை எடுப்பது பேராபத்தை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மாதவிலக்கு சுழற்சியை பாதிப்பதில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. உங்கள் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அது குறித்த பதற்றம், பயம், ஸ்ட்ரெஸ் நிச்சயம் அவருக்குள் இருக்கலாம்.

அதன் காரணமாகவும் பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே, நீங்களாக எந்த மாத்திரைகளையும் வாங்கித் தராமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...