Skip to main content

பூனைக்கடி ரேபிஸ் நோயாக மாறிய கொடுமை; வேதனையில் இளைஞர் விபரீத முடிவு.. மருத்துவமனையில் சோகம்

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் - விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது.

பூனை

உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், பாலமுருகனுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். கடந்த வாரம், அடிக்கடி தலைவலிப்பதாக பாலமுருகன் கூறியுள்ளார். குடிக்கும் தண்ணீரை பார்த்தும், காற்று வீசும்போதும் பயந்து நடுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவரை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரேபி்ஸ் அறிகுறி இருப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்றிரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலமுருகனை சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் அந்த அறையில் கூச்சலிட்டவர், அங்கிருந்து வெளியேற முயன்றவரை தடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த பாலமுருகன் அதிகாலையில் அறையில் இருந்த போர்வையால் கழுத்தை இறுக்கி கட்டி, மறுமுனையை கதவில் கட்டி தொங்கியபடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலமுருகன்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்களும், பணியாளர்களும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

பூனை கடித்ததை அலட்சியமாக விட்டதால் 26 வயதான பாலமுருகன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பூனைக்கடி தொடர்பாக கால்நடைத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாயைப் போன்றே பூனைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும், பூனை கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

பூனைக்கடியை அலட்சிய படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பூனை கடிக்கும் இடத்தை பொறுத்து வேகமாக ரேபிஸ் நோய் பரவும் என்பதால் சிறிய அளவில் கடித்தாலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பூனைக்களுக்கான தடுப்பு ஊசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடைக்கிறது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...