Skip to main content

தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!

''காலேஜ் படிக்கிற பசங்க மீசை, தாடி வளரவும் நெற்றியில் வரும் வழுக்கையைச் சரி செய்யவும் டெர்மா ரோலர் பயன்படுத்துறாங்க. அதுவும், மருத்துவரைச் சென்று பார்க்காமல் வீட்டிலேயே இந்த டெர்மா ரோலரைப் பயன்படுத்திட்டு வராங்க'' என்கிற தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகரிடம், இதை யார், எப்படி பயன்படுத்துவது என்பன குறித்து கேட்டோம்.

டெர்மா ரோலர்
டெர்மா ரோலர்

முடி உதிர்தலுக்கோ அல்லது தாடி, மீசை வளரவோ டெர்மா ரோலரைப் பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எந்த அளவுக்கு முடி உதிர்தல் இருக்கிறது; எந்தக் காரணத்தால் முடி உதிர்கிறது; எதனால் தாடி, மீசை வளராமல் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, உங்களுக்கு இருக்கும் பிரச்னைக்கு டெர்மா ரோலர் பலன் தருமா என்பதை ஒரு தோல் மருத்துவரிடம் சென்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரீல்ஸ்களில் பார்த்துவிட்டு ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கிடையாது. மருத்துவரைச் சென்று பார்க்கும்போதுதான் அவர்கள் டெர்மா ரோலரை எப்படி, எந்த அதிர்வெண்ணில் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வார்கள். அதன்படி பயன்படுத்துவதுதான் சரி. அதுதான் பலனும் தரும்.

டெர்மா ரோலர்
டெர்மா ரோலர்

டெர்மா ரோலர் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டி, தலை மற்றும் முகத்தில் நன்கு முடி வளர பயன்படுகிறது. முகப்பருவினால் ஏற்பட்ட வடுவைச் சரி செய்யவும் இது பயன்படுகிறது. அதேநேரம், முகத்தில் பருக்கள் இருக்கும்போது இதைப் பயன்படுத்தக்கூடாது.

டெர்மா ரோலரை 'மைக்ரோ நீடிலிங்' என்றும் சொல்லலாம். இதில் சின்னச் சின்ன ஊசிகள் இருக்கும். டெர்மா ரோலரை பிரச்னையுள்ள பகுதியில் வைத்து ரோல் செய்யும்போது, அதிலிருக்கிற ஊசிகளால் செல்களில் தூண்டல் ஏற்பட்டு கொலாஜென் உற்பத்தி ஆகும்.

உடம்பில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், அந்தக் காயத்தை சரிசெய்ய வளர்ச்சிக் காரணி செயல்படுவதுபோல, சின்னச் சின்ன ஊசிகள் கொண்ட டெர்மா ரோலரை தலை அல்லது முகத்தில் ரோல் செய்யும்போது, அந்தப்பகுதிகளில் இருக்கிற செல் உற்பத்தியை மேம்படுத்தி, கொலாஜினை உற்பத்தி செய்து முடி வளர உதவி செய்யும்.

 தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர்
தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர்

டெர்மா ரோலரை அதிகமாகப் பயன்படுத்துவதும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதைத் தவறுதலாக அல்லது அதிகமாகப் பயன்படுத்தும்போது, அந்த இடத்தில் எரிச்சல் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத் தவிர்க்க எந்தப் பிரச்னைக்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகத்தான் ஒரு தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு டெர்மா ரோலரை பயன்படுத்துங்கள் என்கிறேன்'' என்று முடித்தார் தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...