Skip to main content

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும் வலி உயிரே போகிறது. பிறகு மெள்ள மெள்ள வலி குறைகிறது. திடீரென இப்படிப்பட்ட வலி ஏற்பட என்ன காரணம், இந்த வலி சில நாள்களில் சரியாகிவிடுமா, தொடருமா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது  பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தெரிகிறது. 

பிளான்ட்டர் ஃபாஸியா (Plantar Fascia) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும்  தடிமனான ஒரு  திசு. இந்தத் திசுவானது குதிகால் எலும்பை கால்விரல்களுடன் இணைக்கிறது. பாதத்தின் வளைவுக்கு உறுதியையும் வழங்குகிறது. கால்களின் வடிவத்தைப் பராமரிக்கவும், வாக்கிங், ஜாகிங் மேற்கொள்ளும்போது அந்த இயக்கத்தை எளிதாக்கவும் வில்லின் நாண் போல ஊக்கசக்தியாக பிளான்ட்டர் ஃபாசியா செயல்படுகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்படும்போது கால்களில் வலி உண்டாகும். அதையே பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்கிறோம்.

உடல் பருமன்தான் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அது தவிர,  செருப்போ, ஷூவோ நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும்.

பிளான்ட்டர் ஃபாசிடிஸ் பாதிப்பின் விநோத தன்மையே, காலையில் எழுந்து முதல் அடி வைக்கும்போது கடுமையாக வலிப்பதுதான். அதாவது நீண்ட ஓய்வுக்குப் பிறகு எடுத்து வைக்கும் முதல் அடியில் தீவிர வலியை உணர முடியும்.

இந்த அதிகாலை வலியானது பெரும்பாலும் குதிகாலில்  கூர்மையான  ஒரு  பொருளால் குத்துவது போன்ற உணர்வை உண்டாக்கும். அமர்ந்திருத்தல், உறங்குதல் போன்ற செயலற்ற காலங்களில்  பிளான்ட்டர் ஃபாசியா தசைகள் இறுக்கமடைந்து, சுருங்குவதால் இந்த வலி உண்டாகிறது. திடீரென காலில் எடை விழும்போதும் வலி, இறுக்கம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும்.

பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார்.

மருத்துவரை அணுகினால், உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் அறிந்து சிகிச்சை அளிப்பார். பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார்.

பிளான்ட்டர் ஃபாசியாவில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான கால் சீரமைப்பை ஊக்கப்படுத்தவும் போதுமான ஆதரவு கொண்ட காலணிகளைத் தேடுங்கள். ஷாக் அப்சார்பர் (Shock absorber) போல அதிர்ச்சியை உறிஞ்சி, குதிகால் அழுத்தத்தைக் குறைக்க குதிகால் மற்றும் முன்கால் பகுதிகளில் போதுமான குஷனிங் கொண்ட காலணிகள் பலன் தரும். சாதாரண காலணிகளை அணிந்தால் பாத வலி இன்னும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். இது நிச்சயம் குணப்படுத்தக் கூடியதே. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...