Skip to main content

Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack

Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஒரு நபர் திடீரென உயிரிழக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்ட் அட்டாக் பாதிப்பும் ஒன்று. உங்கள் நண்பர் விஷயத்தில் அவரது உடல்நலம் எப்படியிருந்தது, எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தன என்ற விவரங்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும்.

அவரது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருந்தது என்பது முதல் கேள்வி. இதயத்தின் பம்ப்பிங் திறன் குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் போகும் வாய்ப்புகள் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் வென்ட்ரிகுலர் டக்கிகார்டியா (Ventricular tachycardia) அல்லது வென்டிகுலர் ஃபிப்ரிலேஷன்  (Ventricular fibrillation) எனப்படுகிற மிக மோசமான இதயத்துடிப்பு நிலை. இதயத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். 

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  பைபாஸ் கிராஃப்ட்  திடீரென மூடிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பைபாஸ் கிராஃப்ட் என்பது இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை.

இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால்  நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்

இவற்றை சரி செய்ய, அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள வேறு சில ரத்த நாளங்களை எடுத்து அடைபட்ட ரத்த நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இவ்வாறு அடைப்பைத் தவிர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படும் இந்த ரத்த நாள சிகிச்சைதான்  பைபாஸ் கிராஃப்ட்.  இது திடீரென மூடிக்கொள்ளும் நிலையில், மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் பொதுவான கருத்தாகச் சொல்லலாமே தவிர,  உங்கள் நண்பர் விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பைபாஸ் செய்த ஒரே வாரத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...