Skip to main content

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என் மகளுக்கு 17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது.  அதன் காரணமாக தூக்கமில்லாமலும் அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுகர் டெஸ்ட் செய்தபோது மகளுக்கும் எடுத்துப் பார்த்தேன். அவளுக்கு வெறும்வயிற்றில் 110 என காட்டியது. இது சாதாரணம்தானா... கவலைப்பட வேண்டியதா?

- Santhiya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி

17 வயது மகள்... தேர்வு நேரத்தில், தூக்கமில்லாமல் இருந்தபோது சர்க்கரை அளவை செக் செய்திருக்கிறீர்கள். ஏன் டெஸ்ட் செய்தீர்கள் என்று தெரியவில்லை. அது அவரது ஸ்ட்ரெஸ்ஸை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். பொதுவாகவே, தேர்வு நெருங்கும்போதோ, உடல்நலமின்றி இருக்கும்போதோ, எதிர்பாராத நிகழ்வுகளின் போதோ 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' (Stress-induced hyperglycemia -SIH) என்ற பிரச்னை வரலாம். ஏதேனும் காரணங்களால் நாம் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்போதும், பயத்துக்கு உள்ளாகும்போதும் நம் உடலில் கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின்  சுரப்பு அதிகமாகும்.

காட்டிசாலும் அட்ரீனலினும் நம் உடலில் அதிக அளவிலான குளுக்கோஸை உற்பத்தி செய்யும். தவிர, இன்சுலின் சுரப்பையும் குறையச் செய்யும். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் சிலருக்கு 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' பாதிப்பு வரலாம். இதனால் ரத்தச் சர்க்கரை அளவானது, நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 110 என்ற அளவிலும் இருக்கலாம்... சிலருக்கு 200 வரையிலும்கூட காட்டலாம்.  இப்படி ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டும்போது அதற்காக பயப்படவோ, பதறவோ தேவையில்லை. மருந்து எடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

இந்த நேரத்தில் பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவு எடுக்கவேண்டியது முக்கியம். ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றம் நீங்க ரிலாக்சேஷன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் அதை முறைப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும்போது, இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 முதல் 9 மணி நேரத் தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும்போது, இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 முதல் 9 மணி நேரத் தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஸ்ட்ரெஸ் காரணமாக குழந்தைகள் நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் சாப்பிடுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்றவற்றைச் செய்யாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடாமலேயே இருப்பதும் தவறு. காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது மிக முக்கியம். ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க முடியாத பட்சத்தில், மருத்துவ ஆலோசனையை நாடலாம். மற்றபடி ஸ்ட்ரெஸ்ஸால் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரைக்கு பயப்படத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...